இசையமைப்பாளர் யுவன் 'அதிரடி'... "இந்தியாவில கொரோனா மட்டும் இல்ல, 'இதை'யும் ஒழிக்கணும்.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி விளக்கேற்றும் கோரிக்கை இசையமைப்பாளர் யுவன் அதிரடி பதிவு Yuvan shankar raja Slams stupidity in 9 pm 9 minutes

இந்நிலையில் பிரதமர் மோடி நாடு மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். நமது ஒற்றுமையை காட்டும் வகையில் 9 ஆம் தேதி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி கூறினார். இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

ஆனால் சிலர் அந்த கோரிக்கையின் சாராம்சம்சத்தை புரிந்து கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக கையில் எரிபந்தங்களுடன் உலா வந்தனர். சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இது போன்ற சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா நேற்று இரவு ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "இந்தியாவில் கொரோனா மட்டும் இல்ல, முட்டாள்தனமும் அழிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor