கொரோனா ஊரடங்கு... மீறி வந்த இளைஞர்களை 'வெச்சு' செய்த போலீஸ்காரர்... இப்படியும் ஒரு தண்டனையா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். நேற்றைய தினம் பேசிய பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு மீறி வெளியே வந்த இளைஞர்களுக்கு கிடைத்த தண்டனை Youngsters To Get An Unusual Punishment For coming Out During Corona Lockdown

இப்படி சாலைகளில் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை பிடித்து போலிஸ்காரர் ஒருவர் கொடுத்திருக்கும் தண்டனை, வைரலாகி வருகிறது. ஆம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சாலையில் உருள விட்டுள்ளார், அந்த காவலர். சிலர் இந்த வீடியோவிற்கு கீழே "சரியான தண்டனை, அப்போ தான் இவர்களுக்கு புரியும்" என்று கமெண்ட் செய்துள்ளனர். இந்த வித்தியாசமான தண்டனை பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், ஆபத்தாகவும் போய் முடியலாம். தெருவில் இருக்கும் கிருமிகள் மூலம் கூட பாதிப்பு ஏற்படலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

Entertainment sub editor