ஜி.வி.பிரகாஷ் படத்தில் இணைவது குறித்து மகிழ்ச்சியில் 'பிகில் பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்கு பிறகு இயக்குநர் எழில் தற்போது 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

Vivek tweets about Ezhil and GV Prakash's Aayiram Jenmangal

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக இரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை சி.சத்யா இசையமைக்கிறார். யு.கே.செந்தில் குமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தில் நிகிஷா படேல், ஈஷா ரெப்பா, சதிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை சலுப்பி சோக்கா இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை விவேக் எழுதுகிறார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், இசையமைப்பாளர் சத்யாவின் 'எங்கேயும் எப்போதும்' பாடல்கள் காலத்திற்கும் நிற்கும். அவருடன் முதன் முறையாக இணைகிறேன். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பூவெல்லாம் உன் வாசம்' பட இயக்குநர் எழில் சார் படம். வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ் பிரதர், ஆயிரம் ஜென்மங்கள் படத்துக்காக எழுதுவதில் மகிழ்ச்சி  என்று குறிப்பிட்டுள்ளார்.