www.garudabazaar.com

"டிரெஸ் மாத்தும்போதா எடுப்பீங்க..?".. தாமரைக்காக சுருதியிடம் பாய்ந்த ஹவுஸ்மேட்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

thamarai selvi emotional over sruthi game in coin task

இதில் காயின் டாஸ்க் துவக்கி வைத்து இருக்கும் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை என்று சொல்லலாம். இன்னும் காயின் டாஸ்க்கை மையமாக வைத்து சூடான பல விவகாரங்கள் வீட்டுக்கும் நடக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் தாமரை குளித்து முடித்து ஆடை மாற்றும்போது அவருடைய காயினை, ஸ்கெட்ச் போட்டு பாவனியின் உதவியுடன் சுருதி காயினை எடுத்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பாகி இருக்கிறது.

இந்த சம்பவத்தில் டிரஸ் மாற்றும் அறைக்கு தாமரை செல்ல, அங்கு இசைவாணியின் ஆடை இருப்பதாக சொல்லி நுழைந்த சுருதி அங்கிருந்த தாமரையின் காயினை எடுத்துக்கொண்டு வந்து பிக்பாஸில் கேமராவின் முன் காட்டி ‘காற்று’ என்று எழுதப்பட்ட அந்த நாணயத்தை தான் எடுத்து விட்டதாகவும் இனி அந்த நாணயம் தனக்குத்தான் சொந்தம் என்றும் பதிவு செய்தார்.

அந்த நேரத்தில் தாமரையின் அருகே நின்று டவலை பிடித்தபடி பாவனி மறைத்துக்கொண்டார். இதனை அடுத்து அங்கிருந்து வெளிவந்த தாமரை சுருதியிடம், “இது தப்பு பாப்பா.. இது துரோகம்.. நம்பிக்கை துரோகம்.. உன்னை எவ்வளவு நம்பினேன்.. உன்னிடம் எப்படி எல்லாம் பழகினேன்.. நீ எனக்கு இந்த நிலைமையில் இப்படி செய்திருக்கிறாயே?” என்று அழுதும் புலம்பியும் கோபப்பட்டும் ஆக்ரோஷமாகவும் பேசத் தொடங்கினார்.

இதனை கேட்டு அனைத்து போட்டியாளர்களும் அங்கு வந்து விட்டனர். எனினும் தாமரைக்கு அனைவரும் ஆதரவாகவே நிற்க, இன்னொரு பக்கம் சுருதி, பாவனி, மதுமிதா மூவரும், “இது விளையாட்டு.. இது சரிதான்.. இதில் இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று எந்த ரூல்ஸூம் இல்லை. ” என்று விளக்கம் அளித்தனர்.

எனினும் தாமரையோ, “நான் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் எடுத்தாலும் நான் எப்படி கத்த முடியும்? அந்த நிலைமையில் நான் இருந்தேன்ல?” என்று சொல்லி, “என்னை இப்படியான ஒரு நிலைமைக்கு ஆக்கிவிட்டீர்களே? என்னை விட்டுவிடுங்கள் நான் போகிறேன்” என்றும் அவர்களிடம் புலம்பத் தொடங்கினார்.

அதன் பின்னர் சுருதியிடம் ராஜூ, “நீ கேட்ருந்தாலே அவ கொடுத்திருப்பா” என சொல்ல., “எனக்கு அப்படி எடுக்கணும்னு இல்ல” என்று சுருதி பதில் அளிக்க, “சோ இப்படிதான் எடுக்கணுமா?” என ராஜூ கேட்டுவிட சுருதி அழத் தொடங்கினார். அத்துடன் காயினை கொடுத்தால், தான் தவறு செய்துவிட்டதாக ஆகிவிடும் என சுருதி கூற, தாமரையோ, “காயின் வேண்டாம் பாப்பா.. நீ விளையாண்ட ஆட்டத்தை மக்கள் பார்க்கவே இல்லை. இப்படி கேம் ஆடாத தப்பு அவ்வளவுதான்.. உன் மேல கோவமா இருக்கேன். பேசாம போ!” என கூறிவிட்டார்.

thamarai selvi emotional over sruthi game in coin task

People looking for online information on Biggboss, BiggBossTamil5, VijayTelevision, Vijaytv will find this news story useful.