www.garudabazaar.com

அபினய் கொடுத்த பட்டம்.. அழுத தாமரை.. "சாவித்ரி கொடுத்ததா நினை" - தலைவி வனிதா Bigg Boss Ultimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BiggBossUltimate, 06, பிப்ரவரி 2022:- பிக்பாஸ் 5வது சீசன் மூலம் பிரபலமானவர்கள் தாமரை செல்வி மற்றும் அபினய். இவர்களுள் தாமரை செல்வி நாடக கலைஞர். அபினய், நடிகை சாவித்ரியின் பேரன் மற்றும் நடிகர் ஆவர்.

thamarai cries vanitha and suresh motivated biggboss ultimate

பிக்பாஸ் அல்டிமேட்

இவர்கள் இருவருமே தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரம் நடந்த பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொகுத்து ஒட்டுமொத்தமாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது.  இதில் தாமரைக்கு அபினய்,  ‘மகா நடிகை’ என்கிற பட்டத்தை கொடுத்துவிட்டார். அது அவராக கொடுக்கவில்லை. பிக்பாஸில் இருந்து அனைவருக்கு கொடுக்க சொல்லப்பட்ட பட்டம். ஆனால், அதுவும் ஓட்டு போட்டு முடிவு செய்யப்பட்டதுதான். எனினும் அதை ஒவ்வொருவர் மூலம் கொடுக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. அதைதான் அபினய் தாமரைக்கு கொடுத்தார். அதற்கு தாமரை செல்விக்கு அழுகையே வந்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மற்றவர்கள் அனைவருமே சமாதானப் படுத்த முயற்சித்த போது வனிதாவும் களத்தில் இறங்கினார்.

Also Read: "40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு".. Bigg Boss வீட்டில் வனிதா உருக்கம்

தாமரையை சமாதானம் செய்த வனிதா 

ஆம், வனிதா தாமரை செல்வியை சமாதானப்படுத்தும்போது, “நாம் பாசிடிவாக எடுத்துக் கொண்டால் பாசிடிவ் தான் நம்மை தேடி வரும்.

thamarai cries vanitha and suresh motivated biggboss ultimate

நெகடிவாக எடுத்துக்கொண்டால் நெகடிவிட்டி தான் நம்மை தேடும் வரும். வருவதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் நம்மிடம் வந்து சேரும்” என்று வேற லெவலில் தாமரையை மோட்டிவேட் செய்தார்.

அபினய் கொடுத்த மகா நடிகை பட்டம்

தொடர்ந்து பேசிய வனிதா, “மகா நடிகை என்பது எப்பேற்பட்ட பெயர். இவ்வளவு நாள் நாடகத்தில் நடித்து கலைசேவை புரிந்த உனக்கு, அந்த சாவித்ரி அம்மா தான் இதை கொடுத்திருக்கிறார். ஆம் இந்த பட்டத்தை அபினய் கையால் கொடுக்க வைத்துள்ளார்கள். அவர் சாவித்ரியின் பேரன், எனவே சாவித்ரி அம்மாவின் பிரபலமான பட்டமான மகா நடிகை எனும் பட்டத்தை அவர் பேரனே உனக்கு கொடுத்திருக்கிறார். எனக்கெல்லாம் இப்படி ஒரு பட்டம் கொடுத்திருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருப்பேன்” என கூறினார்.

thamarai cries vanitha and suresh motivated biggboss ultimate

அதன் பின்னரே கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தாமரை இயல்பு நிலைக்கு திரும்பினார். வனிதாவுடன் சேர்ந்து இந்த பாய்ண்ட்டை சுரேஷ் தாத்தாவும் வழிமொழிந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் சமாதானத்துக்கு முதலில் நிற்கும் சுரேஷ் தாத்தா அவ்வப்போது, உடனுக்குடன் சண்டை போட்டு, உடனுக்குடன் அதில் இருந்து வெளியே வந்துவிடுவார்.

வனிதா விஜயகுமார்

இதேபோல் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டுக்குள் காபி பொடி பிரச்சனையில் முதல் 2, 3 நாட்கள் சூடாக இருந்தார். பின்னர் அந்த விஷயம் ஆறிப்போனது. ஆனாலும் தொடர்ந்து எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வெடிக்கும் போலிருக்கிறது.

thamarai cries vanitha and suresh motivated biggboss ultimate

அதே சமயன் டாஸ்க் மற்றும் சண்டை நேரத்தில் சண்டை போடும் போட்டியாளர்கள் மற்ற நேரங்களில் இயல்பாக இருப்பதை இந்த 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண முடிகிறது. முன்னதாக இதுபற்றி பேசியிருந்த வனிதா, “முந்தைய சீசன்களில் ஒரு மணி நேரம் தான் காண்பித்தார்கள், ஆனால் இப்போது 24 மணி நேரமும் காண்பிக்கிறார்கள். அதனால் தான் இந்த நிகழ்ச்சிகு வந்தேன், இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன்!” என கூறியிருந்தார்.

Also Read:  "தப்பிச்சது 2வது வாழ்க்க தான்".. சென்னை தீவிபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் உட்பட 30 பேர்.

தொடர்புடைய இணைப்புகள்

thamarai cries vanitha and suresh motivated biggboss ultimate

People looking for online information on BiggBoss Ultimate, Suresh Chakravarthy, Thamarai, Vanitha Vijaykumar will find this news story useful.