கொரோனா தாக்கம் - மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா எடுத்த முக்கிய முடிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் அவசியம் என அரசு அறுவுறுத்திவருகிறது. சமூக பரவலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறையை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தளபதி விஜய்யின் மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனன் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பதிவு | Thalapathy Vijay's

இதுகுறித்து கைகளை அடிக்கடி கை கழுவ வேண்டும், தேவையில்லாமல் வெளியில் செல்லக்கூடாது என்று பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் பட ஹீரோயின் தனது ட்விட்டர் பக்கத்தில்,''எனது பெற்றோர், சகோதரர், நான் நேசிக்கும், எனக்கு நெருக்கமானவர்களின் ஆரோக்கியம் தான் என் வாழக்கையில் முக்கியமானது. நாம் இது குறித்து அறிவுறுத்தல் இல்லாமல் இருந்தோம் என்றால் அவர்களை அது ஆபத்தில் தள்ளிவிடும் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor