தமிழ் நடிகை தூக்கு போட்டு தற்கொலை - சென்னையில் நடந்த துயர சம்பவம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா துணை நடிகை பத்மஜா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் நடிகை பத்மஜா தற்கொலை | tamil tv serial actress padmaja commits suicide and dead

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக இருப்பவர் பத்மஜா. இவரது கணவர் பவன். இருவருக்கும் திருமணம் ஆகி 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார். சினிமா, டிவி சீரியல்கள் மற்றும் விளம்பரப்படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் பத்மஜா. 

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரது வீட்டு கதவு மூடியே இருக்க, போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வந்து பார்த்த போது, பத்மஜா ஃபேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பத்மஜாவின் கணவர் இல்லாத போது நடந்த இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Entertainment sub editor