www.garudabazaar.com

ஜெய்பீம்' இயக்குனர் & சூர்யா இணையும் அடுத்த புதிய படம்.. ஷூட்டிங் எப்போ? செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம் படத்தை அடுத்து இயக்குனர் ஞானவேல் - சூர்யா இணையும் புதிய படத்தின்  பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

Suriya Jai Bhim TJ Gnanavel New Movie Pre Production starts today

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கினார்.  ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்திருந்தார் சூர்யா.

இப்படத்தினை சூர்யா &  ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.

Suriya Jai Bhim TJ Gnanavel New Movie Pre Production starts today

இந்நிலையில் இயக்குனர் ஞானவேல் & சூர்யா இணையும் புதிய படத்தினை 2டி நிறுவனம் தயாரிக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இன்று முதல் துவங்கி உள்ளது எனவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் துவங்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூர்யா படத்திற்கு இடையே ஞானவேல் மேலும் ஒரு புதிய  திரைப்படத்தை அமேசான் பிரைம் வீடியோ தளத்திற்காக இயக்க உள்ளார். இந்த படம் மறைந்த சரவண பவன் நிறுவனர் ராஜகோபாலன் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு "தோசா கிங்" என பெயரிடப்பட்டுள்ளது என‌ கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Jai Bhim TJ Gnanavel New Movie Pre Production starts today

People looking for online information on Jai Bhim, Suriya, Ta Se Gnanavel will find this news story useful.