www.garudabazaar.com

"ஒரு நல்ல படத்துக்கு... அந்த படமே விளம்பரம் தான்.!" - நடிகர் அஜித்.. பரபரப்பு Statement.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின் Statement-ஐ மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Suresh Chandraa Shared Ajith Kumar Statement on Twitter

Also Read | CUTE லுக்கில் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் LATEST PHOTOS!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர்.

Suresh Chandraa Shared Ajith Kumar Statement on Twitter

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி  சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் நடந்து முடிந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்றது. இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் அமீர் & பாவனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நிரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Suresh Chandraa Shared Ajith Kumar Statement on Twitter

பொங்கலுக்கு துணிவு படம் வெளியாக உள்ளது.  படத்தின் வெளியீட்டை ஒட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் அஜித் கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இச்சூழலில் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் பிரபலமான வாக்கியமான "நல்ல படம் தனக்கான விளம்பரத்தை தானே தேடிக்கொள்ளும்" என்ற வாசகத்தை மேற்கோள்  காட்டி சுரேஷ் சந்திரா ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலம் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் நடிகர் அஜித் பங்கேற்க மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | Gautam Karthik Manjima Mohan : நீண்ட நாள் காதலை போட்டுடைத்த கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்.. 😍 Viral Post

தொடர்புடைய இணைப்புகள்

Suresh Chandraa Shared Ajith Kumar Statement on Twitter

People looking for online information on Ajith Kumar, Suresh Chandraa, Suresh Chandraa Shared Ajith Kumar Statement will find this news story useful.