www.garudabazaar.com

அவங்க 'ரெண்டு' பேரு தான் காரணம்... பாலாவை 'ஏத்தி' விட்ட சுச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த பாடகி சுசித்ராவால் பல சிறப்பான, தரமான சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேற ஆரம்பித்து இருக்கின்றன. சுசித்ரா அளித்த எமோஜி அர்த்தம் புரியவில்லை என ரியோ அவரிடம் கேட்க தொடர்ந்து அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, ஷிவானி, பாலா என அனைவரிடமும் அதுகுறித்து சுசித்ரா விளக்கம் அளித்தார்.

Suchitra-Balaji midnight conversation, fans reacts

பாலா-சுசித்ரா இடையிலான பேச்சு விடியும் வரை தொடர்ந்தது. அப்போது சுச்சி அவரிடம் சனம், ஷிவானி ரெண்டு பேரும் உங்கள விளையாட விடாம பண்றாங்க என்றார். இதைக்கேட்ட பாலாஜி வெளில சனம் கூட என்ன கம்பேர் பண்றாங்களா? என ஷாக் ஆனார். இதையடுத்து தான் சனம் முதல்நாள் இரவில் உதைத்த விவகாரத்தை பாலாஜி பெரிதுபடுத்தி கடைசியில் மொத்த பிக்பாஸ் வீடும் அவர்களை சமாதானம் செய்யும்படி ஆனது.

இதேபோல சுரேஷ்-பாலா இடையிலும் சண்டை உருவாகி இருக்கிறது. ஆரி-சம்யுக்தா, ஆஜீத்-சனம், ஆரி-பாலா, பாலாஜி-சனம் என பிக்பாஸ் வீட்டில் நேற்று எக்கச்சக்க சண்டைகள் நிகழ்ந்தன. வைல்டு கார்டு எண்ட்ரி கொடுத்த வேலையை சிறப்பா செஞ்சிட்டாங்க என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சுசித்ரா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

Suchitra-Balaji midnight conversation, fans reacts

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.