'தனுஷ் படம் வெளியாவதில் சிக்கல் ?' - அதிரடியாக நாளை வெளியாகும் ஆக்ஷன் படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிச்சைக்காரன்' படத்துக்கு பிறகு இயக்குநர் சசி இயக்கியிருக்கும் படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், சித்தார்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Sivappu Manjal Pachai releases Tomorrow September 6th

இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பகா ரமேஷ் எஸ்.பிள்ளை தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்  இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இப்படம் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இன்நிலையில் பல ஊடகங்களில்  இப்படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு படக்குழுவினர் மாற்றி உள்ளனர் என்று செய்திகள் வெளியாது.

தற்போது தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம்  நாளை ( செப்டம்பர் 6 ஆம் தேதி) வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் ஃபிலிம்ஸ் ரமேஷ் எஸ்.பிள்ளை இப்படத்தை முன்பே அறிவித்திருந்த ரீலீஸ் தேதியில் (செப்டம்பர் 6)  படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.