Sivakarthikeyan-ன் அடுத்த படத்தில் இருந்து வெளியான முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தனது  எஸ்கே புரொடக்ஷன் தயாரிப்பில் ஜூன் 14 ஆம் தேதி வெளியான படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. இந்த படத்தில் ரியோ ராஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

Sivakarthikeyan and Arun Prabu Purusothaman's Vazhl wrapped up

இந்த படத்தில் ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஷபிர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தான் தயாரிக்கவிருக்கும் படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார். வாழ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை 'அருவி' படத்தை இயக்கிய அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 75 நாட்களாக நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாகவும், சுமார் 100 லொகேஷன்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.