'அமலா பாலின் Nude காட்சிகளை எப்படி படமாக்கினோம் ?' - 'ஆடை' பட இயக்குநர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மேயாத மான்' படத்துக்கு பிறகு ரத்னகுமார் இயக்கி வரும் படம் 'ஆடை'. இந்த படத்தில் அமலா பால் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

Aadai director Rathna Kumar speaks about Amala Paul

இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் டீஸர் சில  நாட்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் அமலா பால் நடிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த படம் குறித்தும் அமலா பாலுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் இயக்குநர் ரத்ன குமார் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அந்த படத்தில் அமலாபாலின் நிர்வாணமான காட்சிகளை படமாக்கிய போது ஏற்பட்ட உணர்வு குறித்து பேசினார்.  இந்த படத்துக்கு பின்னாடி இவ்ளோ இன்வஸ்ட்மென்ட் இருக்கு. ஒரு பொண்ணு உங்கள நம்புதுனா உங்களுக்கு அப்படி தோனவே தோனாது. சாரி கட்டிட்டு வர சீன் முன்னாடி, அந்த டிஸ்யூ கட்டிட்டு வர சீன் எடுத்தோம்.

அப்போ அமலா பால் கிட்ட உங்க கிட்ட கொஞ்சம் தான் டிஸ்யூ பேப்பர் இருக்கு அத சுத்திட்டு வரனும் என்றேன். நானும் ஒளிப்பதிவாளரும் காத்துட்டு இருந்தோம். அப்போ வெளியே வந்தாங்க. அந்த சீனுக்கு தேவையான எமோஷன் அவங்க கண்ணுல தெரிஞ்சது''. என்றார்.

'அமலா பாலின் NUDE காட்சிகளை எப்படி படமாக்கினோம் ?' - 'ஆடை' பட இயக்குநர் விளக்கம் வீடியோ