www.garudabazaar.com

சாலையில் நடந்த சரத்குமார்! ‘சென்னையில் ஒருநாள்’ படத்தை நினைவூட்டிய ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அன்றும் இன்றும் வலம் வருகிறார். வயதான சுவடே தெரியாமல் எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் சரத்குமார். நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், பொறுப்புகளைக் கொண்டிருக்கும் சரத்குமார் நடிகர் சங்கத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

இந்த நிலையில், நடிகர் சரத்குமார் நடித்த திரைப்படத்துடன் ஒத்துப்போகும் ஒரு செயலை நிஜ வாழ்க்கையிலும் செய்து அசத்தியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நடிகர் சரத்குமார் சென்னை மத்திய கைலாஷ் வழியாக சென்று கொண்டிருந்த போது, அந்த வழியே வந்த ஒரு ஆம்புலன்ஸ், போவதற்கு வழி இல்லாமல் டிராபிக் நெருக்கடியில் தவித்துக் கொண்டிருந்தபோது, நடிகர் சரத்குமார் கவனித்திருக்கிறார்.

உடனே தன்னுடைய காரில் இருந்து இறங்கி நடந்து சென்று ஆம்புலன்ஸ் வருவதற்கு வழி விடச் சொல்லி ஒவ்வொரு வாகனமாக வேண்டுகோள் விடுத்து, அவர்களை நகர செய்து, ஆம்புலன்ஸுக்கு வழி விடுவதற்கான ஏற்பாடுகளை சரத்குமார் செய்தார். இந்த வீடியோ சிலரால் பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்ற பட்டதை அடுத்து வைரலாகி வருகிறது.

நடிகர் சரத்குமார் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘சென்னையில் ஒரு நாள்’. சரத்குமார், சேரன், பிரகாஷ் ராஜ், பிரசன்னா மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தை ஷாகித் காதர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் இதய அறுவை சிகிச்சைக்காக, வாகனத்தின் மூலம் மாற்று இதயம் கொண்டு செல்லப்படும் போது, எப்படி எல்லாம் டிராபிக் நிர்வகிக்கப்படுகிறது என்பது காட்டப்படும்.

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

இதில் போலீஸ் அதிகாரியாக சரத்குமாரும், டிராபிக் காவலராக சேரனும் நடித்திருப்பார்கள். அப்போது அறுவை சிகிச்சைக்கான இதயத்தை, ‘சேரன்’ தன்னுடைய வாகனத்தில் கொண்டு செல்வார். குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்த போலீஸ் வாகனம், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று இதயத்தை வாங்கிக்கொண்டு மீண்டும், அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டிய நோயாளி இருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர வேண்டும். இதனிடையே நகரத்தில் இருக்கும் சாலை போக்குவரத்தை கன்ட்ரோல் ரூமில் இருந்து நெறிப்படுத்தி, ஒழுங்கு படுத்துவார் சரத்குமார்.

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

இப்படி,  மேற்கண்ட படத்தில் செய்தது போலவே, தற்போது நிஜ வாழ்க்கையிலும், சரத்குமார் செய்து அசத்தியிருக்கிறார். அவருக்கு பல வகையில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

நடிகர் சரத்குமார் அடுத்ததாக M360°STUDIOS சார்பில் தயாரிப்பாளர் ரோஷ் குமார் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் நடிக்கிறார். இயக்குநர் திருமலை பாலுச்சாமி இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார்.இப்படத்தில் சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் முதன்மை பாத்திரங்களில்,  மண் சார்ந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அண்மையில் தான் இந்த திரைப்படத்தின் பூஜை நடந்தது.

இப்படத்தில் சரத்குமார் நாயகனாக நடிக்க, அஷ்வதி நாயகியாக நடிக்கிறார். நந்தா, சுஹாசினி, சிங்கம் புலி, சித்திக், கஞ்சா கருப்பு ஆகியோரும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

வேத்சங்கர் சுகவனம் இசையமைக்கிறார். தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து புகழ்பெற்ற குமார் ஶ்ரீதர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். சண்டை பயிற்சி விக்கி வினோத்குமார் செய்ய, கலை இயக்கத்தை ஶ்ரீமன் பாலாஜி கவனிக்கின்றனர்.

Also Read: கன்னத்தை கடித்து பாராட்டு!.. களைகட்டும் ப்ரொபோஸல்!.. கலக்கும் 'அக்கட தேச' Reality ஷோக்கள்!

சாலையில் நடந்த சரத்குமார்! ‘சென்னையில் ஒருநாள்’ படத்தை நினைவூட்டிய ‘நெகிழ்ச்சி’ சம்பவம்!.. வீடியோ

Sarath kumar clear traffic for ambulance chennai viral video

People looking for online information on Chennaiyil Oru Naal, Sarath Kumar will find this news story useful.