மீண்டும் வருகிறது 'லொள்ளு சபா' - எப்போ ? எத்தன மணிக்கு தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மக்கள் வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது.

இதனையடுத்து பிரபல தொலைக்காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மெட்டி ஒலி, ராமாயணம், சரவணன் மீனாட்சி, சக்தி மான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ரசிகர்களிடையே லொள்ளு சபா நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும் என ரசிகர்களிடையே கோரிக்கைவிடுக்கப்பட்டது. மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இதுகுறித்து விருப்பம் தெரிவித்தார்.

இதனையடுத்து லொள்ளு சபா நிகழ்ச்சி வரும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின், குமுதா ஹேப்பி அண்ணாச்சி என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

Entertainment sub editor