பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படம்... வடசென்னை கதையில் நடிக்கப் போகும் 'மாடல்' நடிகை..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படம் 'சல்பேட்டா'. இதில் ஆர்யா மற்றும் தினேஷ் லீட் ரோல்களில் நடிக்கின்றனர். இது வடசென்னையில் புழங்கும் 'பாக்ஸிங்' கலாச்சாரத்தை பற்றி பேசப் போகும் படம். ஏற்கனவே சென்னை வடசென்னை மக்களை பற்றி இயக்குனர் ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படம் வேற லெவல் ஹிட் ஆனது.

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படம் ஆர்யாவுடன் நடிக்கும் மாடல் நடிகை Model Actress To Join In Pa Ranjith Next Film

மேலும் இந்த படத்தில் கலையரசன், ஜான் கொக்கென், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதை இயக்கத்தை பா.ரஞ்சித், 'பேட்டை' நாவலை எழுதிய தமிழ் பிரபா இருவரும் சேர்ந்து எழுதுகின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் தடம், மீகாமன் படங்களை இயற்றிய மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்திற்காக ஆர்யா செய்யும் வொர்கவுட் புகைப்படங்கள் வெளியாகி மிகவும் வைரல் ஆனது. தற்போதையை லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால் இந்தப் படத்தில் 'போதை ஏறி புத்தி மாறி' படத்தில் நடித்த ஹீரோயின் 'துஷாரா' ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவர் மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா போன்ற பல அழகி போட்டிகளில் பங்கெடுத்து உள்ளார்.

Entertainment sub editor