வெறித்தனம்..!- பிகிலுக்காக கொட்டும் மழையில் காத்துக்கிடக்கும் ரியல் புல்லிங்கோஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட் முன்பதிவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Real Pullingos wait to book tickets for Vijays Bigil in rain

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அக்.25ம் தேதி ரிலீசாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, அதிதீவிர கனமழை பெய்ய வாழ்ய்ப்பிருப்பதாக சென்னை வானியலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பிகில் திரைப்படத்திற்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  கொளத்தூரில் உள்ள கங்கா சினிமாஸ் திரையரங்கின் வாசலில் கொட்டும் மழையிலும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் வரிசையில் நின்று முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்களை பெற்று வருகின்றனர்.

முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.