90-களை கலக்கிய ராமாயணம் சீரியல் நடிகர் காலமானார்.. சோகத்தில் உடன் நடித்தவர்கள் உருக்கம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராமாயணம் தொடரில் நடித்த ஷ்யாம்சுந்தர் காலானி காலமானதாக தெரிய வந்துள்ளது. 

ராமாயணம் சீரியல் நடிகர் காலமானார் | ramayanam actor shayamsundar kalani passed away

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து டிவி சேனல்களில் பழைய சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றனர். ராமாயணம், சக்திமான், மெட்டி ஒலி உள்ளிட்ட சீரியல்கள் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. 

இந்நிலையில் 80 மற்றும் 90-களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயணம் தொடருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. இத்தொடரில் சுக்ரீவன் மற்றும் வாலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்தா ஷ்யாம்சுந்தர் காலானி. இதனிடையே இவர் காலமாகியிருப்பது குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஷ்யாம்சுந்தரின் இந்த திடீர் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் நல்ல மனிதர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்'' என பதிவிட்டுள்ளார். ராமாயணம் மறுஒளிபரப்பு செய்யப்படும் வேளையில், அதில் நடித்த நடிகர் காலமாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

Entertainment sub editor