www.garudabazaar.com

பிரபல சீரியல் நடிகை தற்கொலை... திருமண ஆசை கட்டி ஏமாற்றிய தயாரிப்பாளர்... திடுக்கிடும் தகவல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

26 வயதான தெலுங்கு நடிகை ஷ்ரவானி கொன்டபள்ளி என்ற தொலைக்காட்சி நடிகை கடந்த செப்டம்பர் 8 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அவரது மரணம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றகாவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Popular producer held for tv actress suicide நடிகை தற்கொலை தயாரிப்பாளர் கைது

அவர்கள் டெலிவிஷன் நடிகர் அம்பதி தேவராய ரெட்டி (24), சாய் கிருஷ்ண ரெட்டி (28), அசோக் ரெட்டி (RX-100 படத்தின் தயாரிப்பாளர்). இந்த மூன்று பேரும் இறந்த நடிகையுடன் வெவ்வேறு கால கட்டத்தில் தொடர்பில் இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

மேலும், கடைசியாக அவர் தேவராய ரெட்டிக்கு தொலைபேசி மூலம் பேசும் போது தன்னை மூன்று பேரும் தொந்தரவு செய்ததாகவும் ஷ்ரவானி குற்றம் சாட்டியதாகவும் தெரிகிறது. பிரிந்து சென்ற பிறகும், அவர்கள் நடிகையை தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

Popular producer held for tv actress suicide நடிகை தற்கொலை தயாரிப்பாளர் கைது

People looking for online information on Sravani Kondapalli, Suicide, Telugu actress will find this news story useful.