www.garudabazaar.com

மாமனாரிடம் சித்ரா கதறிய உண்மைகள்... ஹேம்நாத் டெலிட் செய்த ஆடியோ ஆதாரம்... சிக்கியது எப்படி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை சித்ரா. அவர் தனது அசாத்திய நடிப்பினால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சமீபத்தில் அவர் மரணமடைந்த செய்தி வெளியானது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை ரசிகர்களும், குடும்பத்தினரும், பிரபலங்களும் எழுப்பினர். இந்நிலையில் அவர் யாருக்கும் தெரியாமல் இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஹேம்நாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். நேற்றைய தினத்தில் போலீசார் சித்ராவின் கணவரை கைது செய்தனர் என்ற செய்தி வெளியானது.

police reveals the reason behind hemnath arrest

"சித்ரா மீது சந்தேகம் கொண்டு அவரை கடுமையாக பேசியதால்தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த முடிவை எடுத்தார்" என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஹேம்நாத்தின் தந்தை இது பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது "யாரை காப்பாற்ற இது நடக்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் போலீசாரிடம் உண்மையை கூறியிருக்கிறோம். சித்ராவின் தாய் கூறுவது உண்மை என்றால் அது விசாரணையில் தெரியவரும். அதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. " என்று கூறியிருந்தார்.

சித்ராவின் மீது ஏற்பட்ட  சந்தேகத்தினால் அவரை  சித்திரவதை செய்ய ஆரம்பித்த ஹேம்நாத் ஒரு கட்டத்தில் அவரை சீரியலில் நடிக்க கூடாது என்று தடை போட  ஆரம்பித்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தனது மாமனாருக்கு போன் செய்து கொடுக்கும் போது தனக்கு ஹேம்நாத் செய்யும் கொடுமைகளை பற்றி கண்ணீர் விட்டு அழுது கூறியுள்ளார் இந்த போன் கால் சித்ராவின் போனில் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை ஹேம்நாத்  டெலிட் செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனால் தான் ஹேம்நாத்தை கைது செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாமனாரிடம் சித்ரா கதறிய உண்மைகள்... ஹேம்நாத் டெலிட் செய்த ஆடியோ ஆதாரம்... சிக்கியது எப்படி..! வீடியோ

Tags : Hemnath, Chitra

police reveals the reason behind hemnath arrest

People looking for online information on Chitra, Hemnath will find this news story useful.