www.garudabazaar.com

"யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்தார்கள்" - ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ் அடைந்தவர் நடிகை சித்ரா. அவர் தனது அசாத்திய நடிப்பினால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். சமீபத்தில் அவர் மரணமடைந்த செய்தி வெளியானது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகளை ரசிகர்களும், குடும்பத்தினரும், பிரபலங்களும் எழுப்பினர். இந்நிலையில் அவர் யாருக்கும் தெரியாமல் இரண்டு மாதங்களுக்கு முன்னரே ஹேம்நாத் என்பவரை திருமணம் செய்துள்ளார். நேற்றைய தினத்தில் போலீசார் சித்ராவின் கணவரை கைது செய்தனர் என்ற செய்தி வெளியானது.

hemnath father on his arrest over chitra case ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி

"சித்ரா மீது சந்தேகம் கொண்டு அவரை கடுமையாக பேசியதால்தான் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த முடிவை எடுத்தார்" என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த ஹேம்நாத்தின் தந்தை இது பற்றி மனம் திறந்துள்ளார். அவர் கூறும்போது "ஹேம்நாத் இன்று எங்களுடன் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவரை நேற்றைய தினம் போலீசார் கைது செய்தனர். யாரை காப்பாற்ற இது நடக்கிறது என்று தெரியவில்லை. நாங்கள் போலீசாரிடம் உண்மையை கூறியிருக்கிறோம். சித்ராவின் தாய் கூறுவது உண்மை என்றால் அது விசாரணையில் தெரியவரும். அதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் வரதட்சணையாக சித்ராவின் பெற்றோரிடம் எதுவும் கேட்கவில்லை, உங்களுக்கு விருப்பமானதை செய்யுங்கள் என்று தான் சொன்னோம்" என்று கூறியுள்ளார்.

"யாரை காப்பாற்ற என் மகனை கைது செய்தார்கள்" - ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி..! வீடியோ

hemnath father on his arrest over chitra case ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி

People looking for online information on Chitra, Hemnath, Pandiyan Stores will find this news story useful.