www.garudabazaar.com

ஹேம்நாத் சொன்ன கொடூர வார்த்தைகள்... சந்தேக தீயினால் பறிபோன சித்ராவின் உயிர்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. குமரன், முல்லை ஜோடிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் பாசிட்டிவான குணம் கொண்ட சித்ரா, இப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததில், நேற்றையதினம் சித்ராவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

police investigation reveals reason behind chitra death

விசாரணையில் ஆரம்பத்தில் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லி வந்த ஹேம்நாத்திடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், போலீசார் தரப்பில் கூறப்படுவது "கடந்த 9ஆம் தேதியன்று விடுதி அறையில் சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பதை கடுமையாக எதிர்த்து வந்துள்ளார் ஹேம்நாத்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து திரும்பிய சித்ராவிடம் "இன்றைக்கு யார் கூட நடனமாடினாய்" என்று வக்கிரமாக கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சித்ரா பொறுமையாக பதில் அளித்த போதிலும், அதை கேட்காமல் "செத்து தொலை" என்பது போல் கூறி விட்டு விடுதி அறையிலிருந்து வெளியேறி உள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தற்கொலை" செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்தினால் சித்ராவின் உயிர் பறிபோன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

police investigation reveals reason behind chitra death

People looking for online information on Chitra, Hemnath, Pandiyan Stores will find this news story useful.