கொரோனாவால் நின்ற ஷூட்டிங்.. நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொண்டாடிய பர்த் டே... வைரலாகும் போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தனது காதலரான விக்னேஷ் சிவன் தயாரிப்பில் 'நெற்றிக்கண்' என்று படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க திரையுலகத்தினர் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் கொண்டாடிய பர்த் டே Nayanthara VIgnesh Sivan Celebrates Birthday Of Popular Person

இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து 'நெற்றிக்கண்' இயக்குனரான மிலிந்த் ராவ் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த  படத்தை நயன் மிகவும் எதிர்பார்த்திருக்கிறார். படம் முழுக்க சஸ்பென்ஸ்களுடன் திரில்லர் படமாக இந்தப் படம் உருவாக்கி வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் அவர்களுடன் தற்போது நடிகர் அஜ்மல் இணைந்துள்ளார்.

Entertainment sub editor