www.garudabazaar.com

முதல்ல "வாடா, போடா".. கடைசில "சார்".. விவேக் - மயில்சாமி நட்பு நடுவுல இப்டி ஒரு உல்டாவா?!!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகராக விளங்கி இருந்த மயில்சாமி, சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவு, சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரையும் கடும் வேதனையில் ஆழ்த்தி இருந்தது.

Mayilsamy and vivek friendship bond in years exclusive

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Hansika Motwani : அடடே.. நடிகை ஹன்சிகாவுக்காக.. கல்யாணத்துக்கு முன்னாடியே கணவர் கொடுத்த சர்ப்ரைஸ்.. 😍

ஏராளமான திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் அசத்தி உள்ள மயில்சாமி, தனக்கென ஒரு இடத்தையும் தமிழ் சினிமாவில் பிடித்திருந்தார். அப்படி இருக்கையில், அவரது திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. நடிகர் என்பதை தாண்டி சிறந்த மனிதராகவும் இருந்த மயில்சாமி, தன்னாலான உதவியை பலருக்கும் செய்துள்ளார்.

அதே போல, தீவிர சிவ பக்தனாக இருந்த மயில்சாமி, தான் இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு கூட, சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானை வணங்கிய வண்ணம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மயில்சாமியின் மகன் யுவன், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தந்தை மயில்சாமி குறித்து பல்வேறு கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

Mayilsamy and vivek friendship bond in years exclusive

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் விவேக் குறித்து பேசி இருந்த மயில்சாமி மகன், "அப்பாக்கு நான் கடைசி சடங்கு எல்லாம் பண்ணதுனால மூணு நாளைக்கு வீட்டுல இருந்து வெளியே போகக்கூடாது. அதனாலதான் வீட்டுக்குள்ள இருக்கேன். இல்லன்னா நேரா விவேக் சார் வீட்டுக்கு போயிருப்பேன். விவேக் சார் போட்டோ முன்னாடி பேசணும் அப்படிங்கறதுதான் இருந்துச்சு. என் அப்பாவுக்கு என்ன நல்ல பெயர் வந்திருக்கோ அவங்கள பத்தி என்ன சொல்றாங்களோ, அதுல வந்து 70 சதவீதம் விவேக் சாரால தான். அவரு இல்லனா அப்பாவுக்கு அந்த பெயரே இல்லை.

விவேக் சார்க்கும் அப்பாக்கும் நடுவுல இருக்குற உறவு அப்படியே உல்டான்னு தான் சொல்லுவேன். உதாரணமா நம்ம பழகுறப்போ ஒருத்தர முதல்ல ப்ரோ, வாங்க ப்ரோன்னு எல்லாம் பேசுவோம். கொஞ்ச நாள் போகப் போக மச்சான் எப்படி இருக்க அப்படின்னு தான் பேசுவோம். இவங்களுக்கு அப்படியே உல்டா.

Mayilsamy and vivek friendship bond in years exclusive

Images are subject to © copyright to their respective owners.

நான் சின்ன வயசுல பார்க்கும்போது அப்பாவும், விவேக் சாரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பேசுறதை நான் கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா கடைசி ஒரு பத்து வருஷமா விவேக் சாரை, அப்பா 'சார்'ன்னு தான் கூப்பிடுவாரு. அவர் வந்து செல்லமா மயிலு மயிலுன்னு கூப்பிடுவாரு. ஆரம்பத்துல வாடா, போடான்னு பேசிட்டு இருந்த பழக்கம் கடைசியில சார்ன்னு மாறிடுச்சு.

இது எப்படி அப்படிங்குறப்ப தான் அப்பா ஒன்னு சொன்னாரு. எங்க அப்பாக்கு படிக்க தெரியாது. ஆனால் விவேக் சார் ஆபீஸ்ல இருக்குற சில புக்ஸ் பத்தி இருக்குற நாலேஜ் எல்லாம் விவேக் சார் பேசும்போது அப்பாவுக்கு அது பெருசா இருந்துது. இந்த மனுஷனை வந்து காமெடி ஆக்டரன்னு வெளியே சொல்றாங்கடா. ஆனால் சில விஷயத்தை பார்க்கும்போது அவரை அப்படி பேசுறதெல்லாம் தப்பு. அவருக்குன்னு ஒரு மரியாதை நம்ம கொடுத்து தான் ஆகணும்'ன்னு சொல்லுவாரு" என யுவன் தெரிவித்தார். அதன் காரணமாக தான் நடிகர் விவேக்கை சார் என மயில்சாமி அழைத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | ஏரியா மக்களுக்கு அப்பா செல்லபிள்ளையானது இப்படிதான் - மயில்சாமி மகன் உருக்கம்..

முதல்ல "வாடா, போடா".. கடைசில "சார்".. விவேக் - மயில்சாமி நட்பு நடுவுல இப்டி ஒரு உல்டாவா?!!.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mayilsamy and vivek friendship bond in years exclusive

People looking for online information on Mayilsamy, Vivek will find this news story useful.