கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து லாஸ்லியா வெளியிட்ட முதல் பதிவு... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த பிக்பாஸ் சீசன் 3இல் பங்கு கொண்டவர் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பிறகு அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வந்து இறுதி சடங்குகள் நடைபெற்றது.

losliya first post after fifty days of fathers demise லாஸ்லியா வெளியிட்ட முதல் பதிவு

பிக்பாஸுக்கு பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்த லாஸ்லியாவுக்கு முதல் தடையாக வந்தது கொரோனா ஊரடங்கு. அதன்பிறகு அவரது தந்தையின் மரணம் அவரை சுக்குநூறாக உடைத்து விட்டது என்றே  சொல்ல வேண்டும். இந்நிலையில் லாசலியாவின் தற்போதைய நிலை என்ன என்று அவரது ரசிகர்கள் கவலையுற்றிருந்தனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 50 நாட்கள் கடந்து லாஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார் அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான ஒரு புகைப்படத்தை பகிர்ந்து "நம்பிக்கை" என்று குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து இந்தப் பதிவிற்கு கீழே ரசிகர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருவதை காண முடிகிறது.

கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து லாஸ்லியா வெளியிட்ட முதல் பதிவு... ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! வீடியோ

Tags : Losliya

losliya first post after fifty days of fathers demise லாஸ்லியா வெளியிட்ட முதல் பதிவு

People looking for online information on Losliya will find this news story useful.