''சூர்யா அண்ணன் சொன்னாரு... எப்படிடா கல்யாணம் பண்ணிட்டு...'' - மேடையில் கார்த்தி அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தனது அகரம் பவுண்டேசன் சார்பாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். அவரது செயல்பாடுகளுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலும் இருந்தும் ஆதரவு வலுத்து வருகிறது.  இந்நிலையில் அகரம் பவுண்டேசன் சார்பில் சென்னையில் விழா ஒன்று நடைபெற்றது.

Karthi Speaks about Suriya and Agaram Foundation

நிகழ்வில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். அப்போது பேசிய கார்த்தி, ''உங்களை நீங்கள் மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள். நாம யாருக்கும் கீழேயும் இல்லை. மேலேயும் இல்லை. யாருக்கும் சமமுமில்லை. நாம தனி.

நேத்து எங்க அண்ணன் சொன்ன விஷயம். வாழ்க்கையில் பேலன்ஸ் ரொம்ப முக்கியம்னு. எல்லா வீட்டுலயும் கல்யாணம் நடக்கும். ஆனா அந்த விஷயம் புதுசாவே இருக்கும். எப்படிடா கல்யாணம் பண்ணிட்டு வாழ்றாங்கனு இருக்கும்.

ஆனா அது ஒரு அனுபவம். அதுக்குள்ள போனா தான் வாழ்க்கை முழுமை அடையும். நீங்களாம் அதுக்குள்ள போகப்போறீங்க. அதனால இப்பவே அதை சொல்றேன்.  அப்படி போகும்போது இவங்க கூட வாழ்க்கை முழுவதும் இருக்க போறோம்னு முடிவு பண்ணிக்கோங்க. நிறைய சகிப்புத்தன்மைய வளர்த்துக்கோங்க. குழந்தை பிறந்துட்டா அந்த குழந்தை நல்லபடியா வளர்க்குறது ரொம்ப முக்கியம்'' என்றார்.

''சூர்யா அண்ணன் சொன்னாரு... எப்படிடா கல்யாணம் பண்ணிட்டு...'' - மேடையில் கார்த்தி அட்வைஸ் வீடியோ

Entertainment sub editor