www.garudabazaar.com

கால் மேல் கால் போட்டு ரஜினி பாட்டுக்கு Vibe ஏத்திய கார்த்தி.. கண் திறந்து பார்த்தால் மணி சார் 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார்.

Karthi reveals fun moment during he was maniratnams AD

முன்னதாக கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள சர்தார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது.

Karthi reveals fun moment during he was maniratnams AD

இந்த சர்தார் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ISC ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டைபயிற்சி இயக்குனராகவும் கலை இயக்குனராக கதிரும் பணியாற்றியுள்ளனர். இப்படம் அக்டோபர் 21-ஆம் தேதி முதல் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

Karthi reveals fun moment during he was maniratnams AD

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் லைலா மற்றும் ரஜிஷா விஜயனுடன் இணைந்து கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, இயக்குனர் மணிரத்னத்திடம் தான் உதவிய இயக்குநராக இருந்தபோது நடந்த சுவாரசிய சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதன்படி, “மணிரத்னம் சார் 2 மணிக்கு சாப்பிட போனால் 3 மணிக்குத்தான் திரும்ப வருவார். நான் அதுவரையில் அங்கு மாடியில் இருக்கும் அறையில் கணினியில் ஏதாவது பார்த்துக் கொண்டிருப்பேன்.

Karthi reveals fun moment during he was maniratnams AD

அப்போது டேபிளில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு ரஜினி பட பாடலில், இமயமலை ஆகாமல் எனது விழி தூங்காது என்ற பாடலை முணுமுணுத்தபடி அந்த பாடலுக்கு ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தேன். கண்ணை திறந்து பார்த்தால்  மணி சார் என் முன்பாக நின்றுகொண்டிருந்தார். எனக்கு பேரதிர்ச்சி. ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென ஒரு பார்வை பார்த்துவிட்டு போய்விட்டார். பின்னரும் அதை பற்றி அவர் கேட்கவில்லை. அதை சொல்லி அவர் கிண்டல் பண்ணவோ, கலாய்க்கவோ இல்லை” என்று ஜாலியாக குறிப்பிட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthi reveals fun moment during he was maniratnams AD

People looking for online information on Karthi, Mani Ratnam, Ponniyin Selvan part 1, Sardar will find this news story useful.