www.garudabazaar.com

"கல்யாணமே வேணாம்னு போயிட்டா".. கணவரும் இல்ல.. கதறிய பிரிக்யா தாயார்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்ஸ்டாகிராமில் பலரும் ஆடல் பாடல் செய்து பதிவேற்றி பிரபலமானது உண்டு. அதிலும் இந்த நவீன டிஜிட்டல் உலகத்தில் செல்போன் உலகம் முழுவதும் நம்மை கொண்டு சேர்க்கும் வாய்ப்பை அளிக்கிறது.

jesurathi brikiya insta reels fame woman cries about daughter

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பலருள் இன்ஸ்டாகிராம் பயனாளர்களும் குறிப்பிடத்தக்கவர்கள். தங்களுடைய பல்வேறு திறமைகளை அதில் வெளி காட்டும் இவர்கள் சில சமயம் விளம்பரங்கள் கூட இந்த தளங்களை பயன்படுத்தி செய்வதும் தங்களுக்கென்று ஒரு தொழில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதும் உண்டு. தொழில் ரீதியாக சம்பாதிப்பதற்கு இந்த தளங்களை பயன்படுத்துவது மட்டுமல்லாமல் கேளிக்கை, கொண்டாட்டங்கள், வாழ்வியல், மன நிம்மதி, தன்னம்பிக்கை, மோட்டிவேஷனல் உள்ளிட்ட பலவற்றிற்கும் பலரும் இந்த வலைதளங்களில் ரீல்ஸ் பண்ணுவதை விரும்பி செய்கின்றனர்.

தனிநபர் மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் துணையோடும் இவற்றில் பலர் இயங்குகின்றனர். சில சமயம் குடும்பமாகவே சேர்ந்து இயங்குவதும் உண்டு. அப்படி பிரபலமான ஒரு குடும்பம்தான் இன்ஸ்டாகிராம் செலிபிரிட்டியான பிரிக்யாவின் குடும்பம். இந்த பெண்ணின் தாயார், அண்ணன் அவ்வப்போது தந்தை உள்ளிட்ட பலரும் இவர்களது வீடியோவில் வலம் வருவார்கள். பிடித்தமான ஆடல் பாடல்கள் , உரையாடல்கள் என பலவற்றையும் ஜேசுரதி பிரியக்யா என்கிற இன்ஸ்டா கணக்கில் பதிவேற்றும் இவர்களுக்கு எண்ணற்ற ஃபாலோயர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில்தான், பிரிக்யாவின் தாயார் , “என் மகளுக்கும் மகனுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி செல்லம் கொடுத்து வளர்த்தேன். எங்கள் குடும்பத்தினரிடம் பலரும் சரிவர பேசுவதில்லை. உறவினர்கள் பிணைப்பில் இல்லை. என்னுடைய கோடீஸ்வர தம்பி கூட பேசுவதில்லை. இந்த நிலையில் எங்களுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு வருட காலமாக மகளுக்கும் மருமகனுக்கென்றும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். மகளும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார். அவருக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தது. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வந்தனர் . இருவரும் சேர்ந்து கூட ரீல்ஸ் வீடியோக்களைச் செய்தனர். ஆனால் இதனிடையே யாரோ என் மகளை ஏன் உடனடியாக திருமணம் செய்கிறீர்கள்? நீங்கள் இன்னும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் என்பது போல் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது.

இதனால் ஒரு சூட்டிங் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று என் மகள் கேட்டபோது திருமணம் நிச்சயமாகிவிட்டது, இனியும் இப்படி செல்வதை தவிர்க்கலாம் என்று கூறினேன்.  ஆனால் இது பூதாகரமாகி, பலரும் அவளுடைய மனதை மாற்றி விட்டனர், அவள் இறுதியில் திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஆனால் மாப்பிள்ளை மீது எந்த தவறும் இல்லை என்பதால் இந்த திருமணம் வேண்டாம் என்பதற்கு அவளிடம் திடமான காரணம் ஏதுமில்லை. ஆனால் இப்போது இத்தனை நாள் என் குடும்பத்தை தவறாக பேசியவர்களுடன் என் கணவரும் மகளும் சென்று விட்டனர்.

என் மகளுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் எல்லாம் நம் நல்லது கெட்டதுகளில் நம்முடன் இல்லை. அவர்களுக்கு வயதாகி விட்டது. ஏன் மகளுக்கு இப்போதே கல்யாணம் செய்து வைக்கிறார் என்று கேட்கிறார்கள். ஆனால் நமக்கு நடந்த கஷ்டத்தின் போது அவர்கள் வந்து பார்த்ததில்லை. உதவி செய்யட்டுமா என்று கேட்டதில்லை.” என்று கலங்கியுள்ளார்.

மேலும், சில மாதங்களாகவே தன் கணவரும் மகளும் தன்னை வந்து பார்க்கவில்லை, தனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டுள்ள இவர்,  இன்னும் கொஞ்ச நாட்களில் தன்னுடைய 25 வது திருமண ஆண்டை கொண்டாடுவதற்காக திட்டமிட்டு வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக தன் கணவரை ஒரு நாள் கூட பிறந்ததில்லை என்றும் அவரும் தற்போது தன்னைவிட்டு பிரிந்து போய்விட்டதால் தான் தனிமையில் இருப்பதாக அழுதவர், தன்னுடைய திருமண நாளுக்குள் கணவர் திரும்ப வரவேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.

"கல்யாணமே வேணாம்னு போயிட்டா".. கணவரும் இல்ல.. கதறிய பிரிக்யா தாயார்.! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

jesurathi brikiya insta reels fame woman cries about daughter

People looking for online information on Brikiya, Brikiya instagram, Jesurathi, Tiktok, Viral will find this news story useful.