www.garudabazaar.com

அழுது தீர்த்த பின் ஜனனி சொன்ன ஒரு வார்த்தை.. அவருக்கே சிரிப்பு வந்துருச்சு..😄

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒவ்வொரு நாளும் பரபரப்பான கட்டங்களுடன் தான் சென்று கொண்டிருக்கிறது.

Janani start to cry after vikraman speech starts to laugh finally

அதே போல, தற்போது நடைபெற்று வரும் ஃபேக்டரி டாஸ்க்கில் கூட, பொம்மை டாஸ்க்கில் நடைபெற்றது போல பல போட்டியாளர்கள் இடையே சண்டை நடந்து வருகிறது.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும் போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று கலெக்ட் செய்து கொண்டு வருகின்றனர்.

இதில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் பொருட்களை கன்வேயரில் இருந்து எடுக்கும் போது அவர்களுக்கு இடையே சண்டையும் ஏற்பட்டு மாறி மாறி முட்டி மோதிக் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகியோரும் வார்த்தை போரில் ஈடுபடுகின்றனர். அதே போல, விதிகளை மீறி போட்டியாளர்கள் செயல்படுவதை நேராக பிக்பாஸிடம் பேசி எச்சரித்திருந்தார் தனலட்சுமி.

Janani start to cry after vikraman speech starts to laugh finally

இதற்கு மத்தியில், அமுதவாணன் மற்றும் மணிகண்டன் ஆகியோரும் சண்டை போட ஆரம்பித்த நிலையில், இறுதியில் அவர்கள் சமாதானம் ஆனதாகவும் தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து எதிர்பாராத பல ட்விஸ்ட்கள் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது.

Janani start to cry after vikraman speech starts to laugh finally

இந்த நிலையில், ஜனனி பற்றி விக்ரமன் பேசியதும் அதற்கு ஜனனி அழுத நிலையில், கடைசியில் அவர் சொன்ன விஷயம் அதிகம் வைரலாகி வருகிறது.

எப்போதும் ஒருவரை சார்ந்தோ இன்ஃப்ளூயன்ஸ் ஆகியோ தான் ஜனனி இருப்பதாக விக்ரமன் குற்றச்சாட்டு வைத்ததும், தான் தான் ஜனனியை ஆட வேண்டாம் என தடுத்ததாக ஜனனிக்காக விக்ரமனிடம் விளக்கம் கொடுக்க முன் வருகிறார் அமுதவாணன். அந்த சமயத்தில் திடீரென எழுந்து ‘சண்டை போடாதீங்க’ என சொல்லி வெடித்து சின்னக் குழந்தை போல் ஜனனி அழுது விட்டார். இதனைக் கண்டதும் போட்டியாளர்கள் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொள்ள அவரை ஆயிஷா, மகேஸ்வரி என அனைவரும் சமாதானப்படுத்தினர்.

Janani start to cry after vikraman speech starts to laugh finally

அழுததன் பிறகு சிரித்தபடி ஜாலியாக அனைவர் முன்னிலையிலும் பேசிய ஜனனி, “நான் யாரையும் சார்ந்து விளையாடவில்லை. யாரும் என்னை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணவில்லை. நான் விளையாடாம இருப்பதும், ஆடுவதும் என் முடிவுதான்.  நான் தனியா தான் இந்த வீட்ல விளையாட வந்தேன்..” என பேசினார். அப்போது திடீரென ரைஸ் ஆன ஜனனி, சிரிப்பை அடக்க முடியாமல் “சின்ன வயசுல இருந்து ஸ்கூல்ல நான் எவ்வளவோ பெரிய ஸ்போர்ட்ஸ் பிளேயர் தெரியுமா? குளுக்கோஸ் குடிக்காமல் ஸ்போர்ட்ஸ்ல நிப்பேன்.. நான் சின்ன வயசுல இருந்து எவ்வளவு பெரிய ஸ்போர்ட்ஸ் பெர்சன் தெரியுமா? வெளில வாங்க, அவ்வளவோ ஃபோட்டோ எடுத்து வெச்சுருக்கேன்.. நான் எடுத்து காட்டுறேன்..” என கூற அனைவருமே விழுந்து விழுந்து சிரித்துவிட்டனர்.

Janani start to cry after vikraman speech starts to laugh finally

ஆரம்பத்தில் அழுது கொண்டே தொடங்கிய ஜனனி, கடைசியில் ஜாலியாக பேசி முடித்தது பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Janani start to cry after vikraman speech starts to laugh finally

People looking for online information on BB6 Tamil, BIGGBOSS TAMIL, Janani will find this news story useful.