www.garudabazaar.com

"பிக்பாஸில் இருந்து வெளியேறிய நமீதா".. அறிவித்த பிக்பாஸ்!.. கமல்ஹாசன் சொன்ன விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 5ல் முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டிருந்தவர் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கையாக பிரபலமான நமீதா மாரிமுத்து, அண்மையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லட்டுமா டாஸ்கில் தன்னுடைய கதையை கூறியிருந்தார்.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

அதில், தன் 10 வயதில் தனக்கு தோன்றிய புது உணர்வு,  பெற்றோர் மனநல மருத்துவமனையில் அவரை சேர்த்தது, அங்கிருந்து அவர் தப்பியது, பிறகு கோர்ட்டில் கிடைத்த விடுதலை தீர்ப்பு, பின்னர் பெற்றோரை பிரிந்தது, அதன் பிறகு தனது தந்தை தன்னை புரிந்துகொண்டு அரவணைத்தது என அனைத்தையும் கூறியிருந்தார்.

இவ்வளவு க‌ஷ்டத்துக்கு பின், உலக அரங்கில் தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்தும் கூறியிருந்தார். மேலும் தனது தாயும் தன்னை தாமதமாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிட்டு சொல்லி நெகிழ்ந்த நமீதா, இதுவரை, தான் 25 படங்களில் நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

அத்துடன், “எந்த திருநங்கைகளாவது பலாத்காரம் பண்ணி பார்த்திருக்கிறீர்களா? நாங்கள் பெரியவர்களிடம் மரியாதையாக பேசுவோம். எந்த திருநங்கையும் எந்தப் பெண்ணின் வாழ்க்கையையும் கெடுத்தது இல்லை. தங்கள் வாழ்க்கையைதான் கெடுத்துக் கொள்வார்கள்.!” என அழுதபடி பேசியதுடன் இறுதியில் அந்த வலியுடன் ஒரு பாடலையும் பாடினார். அதற்கு அனைவரும்  ‘லவ்’ எமோஜியுடன் கொடுத்தனர்.

இந்த கதையை கேட்ட ஹவுஸ்மேட்ஸ் அனைவருமே உருகி அவருக்கு லவ் கொடுத்தனர். ரசிகர்களும் கூட நமீதாவின் கதையைக் கேட்டு உருகிவிட்டனர். முன்னதாக பிக்பாஸ் வீட்டில் டீ, காபி குடித்தால் கிளாஸை எடுத்து வந்து ஜிங்கில் வைக்க வேண்டும். அப்போதுதான் கழுவுவோம் என்று பிரியங்காவுடன் இணைந்து நமீதா கூற, அப்போது அபிஷேக் மீது பிரியங்கா நகைச்சுவையாக குற்றம்சாட்டி கொண்டிருந்தார். அபிஷேக்கும் பதிலுக்கு குறும்படம் போட்டுக்காட்ட சொல்லி இருந்தார்.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

இதேபோல் தாமரைச்செல்வி அக்காவிடம் நமீதாவுக்கு சிறிய முரண் ஏற்பட்டது. இதனால் குற்ற உணர்ச்சியில் இருந்த தாமரைச்செல்வியை அடுத்த நாள் அதிகாலை நமீதா எழுப்பி மன்னிப்பு கேட்டதுடன், டீ போட்டுக் கொடுத்து,  “நான் அப்படிதான் .. கோபத்தை கொடுத்தால் அன்பை கொடுப்பேன்!” என்று கூறினார்.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

தொடர்ந்து பல குழந்தைகளைப் படிக்க வைப்பதும், திருநங்கைகளை வழி நடத்துவதும் என முக்கிய சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் நமிதா மாரிமுத்து மாடலாகவும் நடிகையாகவும் திகழ்கிறார். இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு திடீரென வெளியேறியிருப்பது, ரசிகர்கள் மற்றும் ஆடியன்ஸ் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

இது தொடர்பான விளக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த 7வது நாள் எபிசோடு தொடங்கிய உடனே பிக்பாஸ் கூறினார். அதில், “தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா வெளியேறி இருக்கிறார்!” என்று கூறி அந்த எபிசோடை பிக்பாஸ் தொடங்கினார். அதன் பின்னர், வார இறுதி என்பதால் பிக்பாஸ் மேடைக்கு நேரில் வந்த கமலஹாசன், இது தொடர்பாக, சற்று விரிவாக விளக்கத்தை ஆடியன்ஸ் முன்னிலையில் கூறியிருந்தார்.

அந்த விளக்கத்தில், “இந்த நிகழ்ச்சியில் வீட்டுக்கு உள்ளே இருந்தவர்களும் சரி, வீட்டுக்கு வெளியே இருந்து வீட்டுக்குள் நடந்தவற்றை பார்த்துக் கொண்டு இருந்தவர்களும் சரி, நானும் சரி நமீதாவிடம் மனதை பறி கொடுத்தோம் என்பது தான் உண்மை. அவர் சொன்ன கதையைக்கேட்டு வீட்டில் இருந்தவர்களும் அன்பை கொடுத்தார்கள். நீங்களும், நானும் கூட தான்.

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் வெளியேறி இருக்கிறார் என்பதை பிக்பாஸ் கூறியிருந்தார். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை இதுவரை நாடி, தேடி வெற்றி பெற்றிருக்கும் நமீதா இனியும் அதுபோல செய்ய வேண்டும்” என கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is this reason for Namitha marimuthu went out biggbosstamil5

People looking for online information on BiggBossTamil5, Kamal Haasan, Namitha Marimuthu will find this news story useful.