www.garudabazaar.com

“முதல் வாரமே 2 பேர் Elimination-ஆ?”.. என்ன நடந்தது? பரபரப்பு Twist.. களைகட்டும் Survivor ஷோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் - ரியாலிட்டி ஷோவில் எலிமினேஷன் ரவுண்டில் 2 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்களா? என்கிற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விடை கிடைத்துள்ளது.

is there 2 elimination in survivor here is what happened

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நந்தா, விஜயலட்சுமி, விக்ராந்த், சிருஷ்டி டாங்கே, இந்திரஜா மற்றும் பலர் பங்கேற்கும் சர்வைவர் ஷோவை ஆக்ஷன் கிங் நடிகர் அர்ஜுன் வழி நடத்திச் செல்கிறார்.

தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த ஷோவில் எலிமினேஷன் ரவுண்ட் தொடங்கியிருக்கிறது. யாரெல்லாம் எலிமினேட் ஆவார்கள் என்பது குறித்து, படபடப்பு ஒரு தரப்பு ரசிகர்களிடம் தொற்றிக் கொள்ள, இன்னொரு தரப்பினர் “முதல் வாரமே எலிமினேட் செய்வார்களா?.. இந்த வாரம் எலிமினேஷனுக்கு வாய்ப்பு குறைவுதான்” என்றும் நம்பி வந்தனர்.

இதனிடையே காடர்கள் தீவு மற்றும் வேடர்கள் தீவு என்று இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். இதில் தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி வேடர்கள் தீவின் பழங்குடி தலைவராகவும், காயத்ரி காடர்கள் தீவின் பழங்குடி தலைவராகவும் உள்ளனர்.

மேலும், நடிகை சிருஷ்டி டாங்கே மற்றும் பிரபல நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும் ‘பிகில்’ திரைப்படத்தில் ‘பாண்டியம்மாள்’ என்கிற கேரக்டரில் நடித்தவருமான இந்திரஜா ஆகியோர் எலிமினேட் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டு வந்தது.

இதற்கு நடுவே, எலிமினேஷன் குறித்த பலரது அனுமானங்களை எல்லாம்  உடைக்கும் வகையில் அனைவரும் போட்ட ஓட்டு செல்லாது என்றும், பழங்குடித் தலைவர் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாரோ அவர்கள்தான் எலிமினேட் ஆவார்கள் என்றும் நடிகர் அர்ஜூன் கூறி அதிரவைத்தார்.

அந்த வகையில் பழங்குடி தலைவர்கள் யாரை நாமினேட் செய்யப்போகிறார்கள் என்கிற பரபரப்பில் சர்வைவர் ஷோ ரசிகர்கள் ஆழ்ந்திருந்தனர். இதற்கு பதில் கிடைக்கும் வகையில் நேற்றைய ஷோவில், காடர்கள் தீவு தலைவரான காயத்ரி, இந்திரஜாவையும், வேடர்கள் தீவு தலைவரான் லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி சிருஷ்டி டாங்கேவையும் தேர்வு செய்தனர். ஆனால் இருவரையும் எலிமினேட் செய்யவில்லை.

இவர்கள் இருவரையும் ஒரு படகில் மூன்றாம் உலகம் என்கிற தீவுக்கு அழைத்துச் செல்ல, அங்கு ‘தி கேம் ஈஸ் ஸ்மார்ட் ஓவர்’ என்கிற துடுப்புச் சீட்டு கிடைக்கிறது. ரசிகர்கள் அதன் பின்னரே நிம்மதி அடைந்துள்ளனர். முதல் வாரம் எலிமினேஷன் போன்ற விஷயங்கள் ஏமாற்றத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் கருதிய நிலையில், யாரும் எலிமினேட் செய்யப்படாதது தற்போது இந்த ஷோவில் செம்ம ட்விட்ஸ்ட் ஆகியுள்ளது.

Also Read: "கொளுத்துங்கடா beat-அ".. Super Singer-ஆ வந்து .. இப்போ.. Anchor-ஆகும் நம்ம சிவாங்கி!!.. அனல் தெறிக்கும் Post!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is there 2 elimination in survivor here is what happened

People looking for online information on Survivorzeetamil arjun, Trending will find this news story useful.