''வேஸ்ட் பண்ணிட்டோமேனு ஃபீல் பண்ணேன்'' - தன் புதுப்படம் குறித்து மனம் திறக்கும் சுந்தர்.சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா உள்ளிட்டோர் நடித்து கடந்த மாதம் வெளியான படம் 'ஆக்சன்'. டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார்.

Director Sundar C speaks about his Action, Iruttu Movie

இதனையடுத்து சுந்தர்.சி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'இருட்டு'. இந்த படத்தை 'முகவரி', 'தொட்டி ஜெயா' படங்களின் இயக்குநர் வி.இஸட்.துரை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சுந்தர்.சி உடன் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவும், ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் குறித்து Behindwoods TVக்கு இயக்குநர் சுந்தர்.சி பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது சூப்பர் ஸ்டாருடன் 'அருணாச்சலம்' மற்றும் கமல்ஹாசனுடன் 'அன்பே சிவம்' படங்களின் அனுபவங்கள் குறித்து பேசினார்.

பின்னர் தனது நடிப்பு அனுபவம் குறித்து பேசிய அவர், ''ஹீரோவாக நடிக்க வந்தவுடன் என் முதல் மூன்று படங்களும் ஹிட். அப்புறம் என்னோட ராங் சாய்ஸ் மற்றும் சில காரணங்களால் நான் நடித்த சில படங்கள் சரியாக ஓடவில்லை. அப்போ தான் தோணுச்சு. என்ன ஒரு அருமையான விஷயங்களை பொறுப்பில்லாம வேஸ்ட் பண்ட்டோமேனு ஃபீல் பண்ணேன்'' என்றார்.

''வேஸ்ட் பண்ணிட்டோமேனு ஃபீல் பண்ணேன்'' - தன் புதுப்படம் குறித்து மனம் திறக்கும் சுந்தர்.சி வீடியோ