உருவாகிறது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பார்ட் 2..! - விரவம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான அடல்ட் காமெடி திரைப்படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

Santhosh to direct Iruttu Araiyil Murattu Kuthu sequel

தமிழில் ‘ஹரஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’ திரைப்படங்களை இயக்கிய பி.சந்தோஷ், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடல்ட் ஹாரர் காமெடி ஜானரில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழில் இப்படம் கடுமையான விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்தபோதிலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை பெற்றது. அதனையடுத்து, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான  ‘சீகடி கடிலோ சித்தா கொட்டடு’ படத்தை சந்தோஷ் இயக்கினார்.

தற்போது மீண்டும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருப்பதாக இயக்குநர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். ஃபான்டஸி ஜானரில் முற்றிலும் புதிய கதையம்சம், புதுமுக நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அது குறித்து அறிவிப்புகள் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் முதல் பாகத்தை விட டபுள் மடங்கு Fun நிறைந்த ரோலர் கோஸ்டாராக இருக்கும் என இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்க்குமார் தெரிவித்துள்ளார்.