Reliable Software
www.garudabazaar.com

"அந்த படத்தின் கதையை படிச்சப்போ தான் லவ் வந்துடுச்சு"... செல்வராகவன் மனைவி ஜாலியான வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது தனித்துவமான ஸ்டைலால் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் இயக்குநர் செல்வராகவன். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து 'புதுப்பேட்டை 2' படம் குறித்து ரசிகர்களுக்கு செல்வராகவன் சர்ப்ரைஸ் தந்தார். அண்மையில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படத்தை அவர் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால் எப்போதுமே  செல்வராகவனுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

director selvaragavan lovely video with wife செல்வராகவன் மனைவி ஜாலியான வீடியோ

இந்நிலையில் இயக்குர் செல்வராகவனின் மனைவியும் இயக்குநருமான கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த வருடம் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி இருவரும் கடந்த 2011 ஆம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும், ஓம் கார் என்ற மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் குடும்பத்தாருடன் சுற்றுலா சென்றுள்ள இயக்குனர் செல்வராகவனுடன்அவரது மனைவி ஜாலியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது மனைவி கூறும் பொழுது "நான் முதன் முதலில் உங்களிடம் வேலைக்கு சேர்ந்த போது, நீங்கள் கானல் நீர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதி இருந்தீர்கள். அதை படித்த பொழுது தான் உங்கள் மீது எனக்கு காதல் வந்தது. மிகவும் அற்புதமாக அதை செய்திருந்தீர்கள். அந்த படம் தான் பின்பு இரண்டாம் உலகம் என்று திரைப்படமாக உருவானது" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

director selvaragavan lovely video with wife செல்வராகவன் மனைவி ஜாலியான வீடியோ

People looking for online information on Selvaragavan will find this news story useful.