Exclusive: "தளபதியா விஜய் இருக்க இதான் காரணம்" - மனம் திறக்கும் இயக்குநர் SAC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை காண ஒரு ரசிகனாக தானும் ஆவலுடன் இருப்பதாக இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Director SAC speaks about Vijay's level of Stardom and Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், பிரபல இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான SA சந்திரசேகர் Behindwoods-க்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதில், விஜய்யின் ரசிகனாக தீபாவளி பண்டிகைக்கு ‘பிகில்’ படத்தை காண ஆவலுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், நடிகர் விஜய் இன்றைக்கு இத்தனை பெரிய உயரத்திற்கு வர அவரது கடின உழைப்பு, தன்னம்பிக்கை, அமைதி அனைத்தும் ஆண்டவன் கொடுத்த வரபிரசாதமாக தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

EXCLUSIVE: "தளபதியா விஜய் இருக்க இதான் காரணம்" - மனம் திறக்கும் இயக்குநர் SAC வீடியோ