காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட விஜய் பட இயக்குநர் மீண்டும் ஒரு உருக்கமான பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யை வைத்து திருமலை, ஆதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரமணா. இவர் தனுஷை வைத்து சுள்ளான் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இவர் தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Director Ramana says thanks to Social Media friends and Media

இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்த காவல்துறையினர், சாலை விதிகளை மீறியதாக பொய்யான குற்றச்சாட்டு தெரிவித்து அபராதம் கட்டச் சொல்லியுள்ளனர். இவர் மறுத்ததற்கு அவரை தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இதனை அவர் வேதனையுடன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது சமூக வலைதளவாசிகள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்து காவல்துறையினரின் செயலை கண்டித்தனர். மேலும் இதுகுறித்து பல்வேறு செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டன.  இந்நிலையில் அவர் மீண்டும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், இன்று முண்ணனி தமிழ் தொலைக்காட்சி செய்திகளிலும், இணையதளத்திலும் பல ஊடக நிறுவனங்கள் எனக்கு நேர்ந்த நிகழ்வை என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்புசெய்தது....

அதன் விளைவாக இன்று காலை காவல்துறை உயர் அதிகாரிகள் திரு. கிருஷ்ணமூர்த்தி( Asst. Commr of police / Traffic investigation/ East range ) திருமதி K. ஷோபனா ( Inspector of police / Adayar -Mylapore / Traffic investigation wing / East range இருவரும் எந்தன் வீட்டுக்கு வந்து மிகுந்த அக்கறையும் பொறுப்புடனும் நடந்த சம்பவத்தை விசாரித்து நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

மேலும், திரு. பெரோஸ் கான் அப்துல்லா ( Deputy commissioner of police / East Dist . Traffic )என்னுடன் தொலைபேசியில் பேசி நடந்தவற்றை கேட்டறிந்தார். இந்த நேர்மையான காவல்துறையின் விசாரணை நிகழ உதவியாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும், ஊடகம், மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.