www.garudabazaar.com

''நான் ஒரு மனிதருக்கு., நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.!!" - மிஷ்கின் உருக்கம். யார் அது.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மிஷ்கின் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ள்ளார். 

இயக்குநர் மிஷ்கின் உருக்கம் | Director mysskin emotional statement over popular director on pisasu 2

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். தனது வித்தியாசமான கதைகள் மற்றும் மேக்கிங்கால் இவர் பிரபலமடைந்தார். இவர் இயக்கிய அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அண்மையில் இவர் உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன் நடிப்பில் சைக்கோ திரைப்படத்தை இயக்கினார். இவர் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். 

இயக்குநர் மிஷ்கின் உருக்கம் | Director mysskin emotional statement over popular director on pisasu 2

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு எமோஷனல் பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

இயக்குநர் மிஷ்கின் உருக்கம் | Director mysskin emotional statement over popular director on pisasu 2

People looking for online information on Bala, Mysskin, Pisasu 2 will find this news story useful.