சித்தி 2 சீரியல் திடீரென முடிவுக்கு வருகிறதா?... வைரலான செய்தி... நடிகை ராதிகா வெளியிட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் 'சித்தி'. நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேற லெவல் ஹிட்டடித்தது. இன்று வரைக்கும் பல குடும்பப் பெண்களின் பேவரைட் சீரியலாக  மனதில் நிற்கிறது சித்தி.

chithi serial actress radhika post சித்தி 2 சீரியல் முடிவுக்கு வருகிறதா?

இந்நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தை சன் டிவி துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே ராதிகா சரத்குமார் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த சில மாதத்திலேயே கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட சீரியல் அப்படியே நிறுத்தப்பட்டது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டனர்.

தற்போது கவின் - வெண்பா திருமணம் பற்றிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் முக்கியமான கட்டத்தில் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சித்தி 2 சீரியல் விரைவில் முடிக்கப்பட இருப்பதாகவும் சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலக இருப்பதாகவும் செய்திகள் வைரலானது. இதுபற்றி தற்போது பதிலளித்துள்ள ராதிகா   "நிச்சயமாக இல்லை. சீரியல் முடிக்கப்பட போவதில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags : Chithi

chithi serial actress radhika post சித்தி 2 சீரியல் முடிவுக்கு வருகிறதா?

People looking for online information on Chithi will find this news story useful.