“தளபதி விசில் அடிக்க வச்சுட்டாரு’ - அசுரனைத் தொடர்ந்து பிகிலை பாராட்டிய பாலிவுட் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தை பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் பாராட்டியுள்ளார்.

Bollywood filmmaker Karan Johar praises Atlee and Vijay's Bigil

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய ‘பிகில்’ திரைப்படம் கடந்த அக்.25ம் தேதி ரிலீசானது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் பிகிலடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கரண் ஜோகர் பிகில் திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

பாலிவுட்டில் இயக்குநர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் கரண் ஜோகர். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியிருந்தார். தற்போது அதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தை பார்த்த கரண் ஜோகர் இயக்குநர் அட்லி மற்றும் விஜய்யை பாராட்டியுள்ளார்.

இது தொடர்பான அவரது ட்வீட்டில், “என்ன ஒரு பண்டிகை கொண்டாட்டம் பிகில் படம். உணர்ச்சி, வெற்றி, இணையற்ற உத்வேக உணர்ச்சிஎன அனைத்தும் கலந்தது. தளபதி விஜய் டாப் ஃபார்மில் இருந்து நம்மை பிகிலடிக்க வைக்கிறார். அவர் சிறந்த அறிவாளி. இந்த கேமோட மாஸ்டர் என்பதை அட்லி நிரூபித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் இயக்குநர்” என தெரிவித்துள்ளார்.