‘டிக்கெட்டே கிடைக்கல..! முதல் வரிசைல படம் பாத்தேன்’ -"பிகில்" குறித்து பாலிவுட் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்து தளபதி விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'பிகில்'. அட்லி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Bollywood Director Anand Kumar About Thalapthy Vijay Bigil

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்து ‘பிகில்’ அடித்து தீபாவளி கொண்டாட்டத்தை பிகில் திரைப்படத்துடன் கொண்டாடி வருகின்றனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிகில் படத்தினை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக வட இந்தியாவில் பிகில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மும்பையில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் தான்.

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் குமார் என்பவர் பிகில் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  'ஒரு தமிழ் படம் மும்பையில் தீபாவளி ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு டிக்கெட் வேண்டும் என காலை முதல் முயற்சித்தேன். கிடைக்கவில்லை. முதல் வரிசையில் அமர்ந்து தான் படம் பார்த்தேன் என கூறி அவர் பிகில் படம் தமிழ்நாட்டு பெண்களுக்கு ஊக்கமளித்திருக்கும் என கூறி பாராட்டியுள்ளார்.