www.garudabazaar.com

“நான் அப்படி இருந்தனா? கஷ்டமா இருக்கு.. மன்னிச்சிடுங்க.!” - மனம் திறந்த Bigg Boss அசல்! பரபர வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

Also Read | Sardar : கார்த்தியின் ‘சர்தார்’ வெற்றி.. இயக்குநர் PS மித்ரனுக்கு ஃபார்ச்சூனர் கார் பரிசு ..!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அசல் கோலார், முதல்முறையாக விஜய் டிவிக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நான் எதனால் வந்தேன் என்பது குறித்த விஷயங்கள் இணையதளத்தில் வெளி வருகின்றன. அதெல்லாம் கஷ்டமாக தான் இருந்தது. அப்படியான நோக்கத்தில் பண்ணாதபோது அது பற்றி வெளியே கலாய்க்கும் போது அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். எளிதில் கடக்க முடியாததாகவே பார்க்கிறேன்.

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

மக்களால் என்ன பார்க்க முடியுமோ அதை வைத்துதான் அவர்கள் முடிவு செய்வார்கள். அவர்களால் பார்க்க முடிந்தது என்னவென்றால் நான் பெண்களிடம் சென்று பேசுவது போன்ற விஷயங்கள்.. ஆனால் என்னுடைய தரப்பு நியாயம் என்பது மக்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும். நான் பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லாரிடமும் ஒரே மாதிரி தான் இருந்தேன். என் சொந்தக்காரர்கள் வீட்டில் எப்படி இருப்பேனோ, அப்படிதான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். உள்ளே இருந்தவர்கள் அனைவரையும் என் வீட்டில் இருப்பவர்களாகவே பார்த்தேன்.

இந்த மீம்ஸ்களில் நிறைய வருவதுபோல் அந்த மாதிரி தவறான செயல்பாடுகளில் நான் ஈடுபட்டதாக அங்கு யாருமே நினைக்கவில்லை.

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

எனக்கும் அப்படி தெரியவில்லை. உண்மையில் அப்படியான எண்ணத்தில் நான் இருந்திருந்தால் உள்ளே இருந்த போட்டியாளர்கள் அதை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருப்பவர்கள் அல்ல. அவ்வளவு கேமராவுக்கு நடுவில் அப்படியான எண்ணத்தில் நான் இருக்க முடியுமா?... எனக்கு தெரியவில்லை. கஷ்டமாக இருக்கிறது. நான் தெரிந்து பண்ணாத ஒரு விஷயம்...  பார்ப்பவர்களை அது தொந்தரவு செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அது தவறு தான். அது பிறந்ததிலிருந்தே என்னுடைய கேரக்டராக இருந்தது. பார்ப்பவர்களுக்கு அப்படி இருப்பது பிடிக்கவில்லை என்றால், அது மாற்றிக் கொள்ளக்கூடிய வேண்டிய விஷயம் என்றால், அதை நான் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.” என தெரிவித்தார்.

 

Also Read | 'விக்ரம் வேதா', 'ஜெய்பீம்' புகழ் மணிகண்டன் நடிக்கும் புதிய படம்.. செம்ம ஜானரா இருக்கே.!

 

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss asal kolar 1st ever explanation for critics over him

People looking for online information on Asal kolaar, Asal Kolar, Asal niva, Asal nivashini, Bigg boss 6 tamil, Kamal hassan, Kamlhaasan, Vijay Television, Vijay tv will find this news story useful.