www.garudabazaar.com

Official: இந்த வாரம் 'வெளியேறியது' இவர்தான்... என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பேர் வெளியேறி இருக்கின்றனர். ஆஜீத் ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறும் நிலை வந்தபோது, தன்னுடைய பாஸை பயன்படுத்தி தன்னை காப்பாற்றிக் கொண்டார். தீபாவளி என்பதால் ஒரு வாரம் எவிக்ஷன் நடைபெறவில்லை. இதனால் இரண்டு வாரம் யாரும் வெளியேறவில்லை.

BB Tamil 4: Who is Evicted this Week?, Details Here!

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரியோ, ஆரி, சோம், சம்யுக்தா, அனிதா, பாலாஜி மற்றும் சுசித்ரா ஆகியோர் இடம் பிடித்தனர். இதில் நேற்று ஆரி, ரியோ ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். இதையடுத்து மீதமிருக்கும் ஐந்து பேரில் இருந்து யார் வெளியேற போவார்கள்? என ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பு எழுந்தது. இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜி முதலில் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

இதற்கிடையில் சுசித்ரா வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தற்போது அது உண்மையாகி இருக்கிறது. சுசித்ரா தற்போது பிக்பாஸை விட்டு வெளியேறி இருக்கிறார். வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதே அவர் வெளியேற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

BB Tamil 4: Who is Evicted this Week?, Details Here!

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.