www.garudabazaar.com

Video: அவரு சொன்னதுல 'தப்பு' இல்ல... ஆனா நீங்க 'இப்படி' செய்றது தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இரண்டு நாட்களாக ரசிகர்களை வச்சு செய்து வந்த கோழி-நரி டாஸ்க் ஒருவழியாக முடிவுக்கு வந்து ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. இதையடுத்து பிக்பாஸ் தன்னுடைய வழக்கமான ஆயுதத்தை எடுத்தார். வாரம் முழுவதும் சிறப்பாகவும், மோசமாகவும் பெர்பார்ம் பண்ணிய இருவரை தேர்வு செய்ய சொன்னார். (அப்போ தானே கண்டெண்ட் கெடைக்கும்)

Balaji, Ramya and Aajeedh talks about Aari Arjunan

இதில் சிறந்த பெர்பாமர்களாக பாலாஜி, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வாகினர். மோசமான  பெர்பாமர்களாக ஷிவானி, கேப்ரியலா இருவரும் தேர்வாகினர். ஷிவானியை முதலில் நாமினேட் செய்து பிள்ளையார் சுழி போட்டது ஆரி என்பதால் பாலாஜி கொஞ்சம் காண்டாகவே சுற்றிக்கொண்டு இருந்தார். இதையடுத்து ரம்யா, ஆஜீத், பாலாஜி மூவரும் கிச்சனில் அமர்ந்து இதுகுறித்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாலாஜி,'' என் பர்த்டே கேக்ல கப்பு முக்கியம்னு எழுதி அனுப்பி இருந்தாங்க. இதைப்பார்த்து ஆரி என்கிட்ட தகுதியை வளர்த்துக்கன்னு அட்வைஸ் பண்ணாரு,'' என சொன்னார். சனம் வெளியில் போன பிறகு ஆரி-பாலாஜி இருவரும் ராசியாகி பேசிக்கொண்டு இருந்தனர். அதை ரம்யா, ஆஜீத் இருவரிடமும் பாலாஜி நேற்று சொல்லியதை கேட்ட ரசிகர்கள் அவரு சொல்லி எவ்ளோ நாளாச்சு. இப்போ போய் அதை பேசிட்டு இருக்கீங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji, Ramya and Aajeedh talks about Aari Arjunan

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.