www.garudabazaar.com

கோபி சட்டையைப் பிடித்து உலுக்கிய பாக்கியலட்சுமி - அடுத்து என்ன நடக்க போகுது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரின் புதிய ப்ரோமோக்கள், தொடர் மீதான விறுவிறுப்பை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது.

baakiyalakshmi tensed with husband divorce decision what next

மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றிய கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார்.

இதற்கு ஒரு படி மேலே சென்ற கோபி, பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்ய பிளான் செய்து, அதற்கான காய்களையும் நகர்த்தி இருந்தார்.

அதன்படி, ஒன்றும் தெரியாத மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி, விவாகரத்துக்கான பாத்திரத்திலும் கோபி கையெழுத்து வாங்கியிருந்தார். விவாகரத்து பத்திரத்தில் தான் கையெழுத்து போடுகிறோம் என்பது கூட பாக்கியலட்சுமிக்கு தெரியாது.

எகிறும் எதிர்பார்ப்பு

இதற்கு அடுத்தபடியாக, விவாகரத்துக்கு வேண்டி பாக்கியலட்சுமியுடன் கோபி கோர்ட்டுக்கு சென்றிருந்த நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே வெளியாகியிருந்த சில ப்ரோமோக்கள், அங்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.

மாறிய கோபி முகம்

அப்படி ஒரு ப்ரோமோவில், இருவருக்கும் சம்மதம் தானா என நீதிபதி கேட்க, கணவரின் மீதுள்ள நம்பிக்கையில் சரி என பாக்கியலட்சுமி தலையாடுகிறார். ஆனால், கோபியோ மனைவிக்கு தெரிந்து விடுமோ என்ற பயத்திலும் நடுக்கத்துடனேயே தலை ஆட்டுகிறார். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகி, உங்களுக்குள் என்ன பிரச்சனை என நீதிபதி மீண்டும் கேட்க, கோபியின் முகமே வியர்த்து போனது.

பதற்றம்

அதே போல, கோர்ட்டில் நடக்கும் மற்றொரு விவாகரத்து காட்சியினைக் கண்டு, மனைவியை ஏமாற்றாமல் இப்படியே போய் விடலாமா என்று கூட, பதற்றத்தில் கோபி மனதில் நினைத்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, மற்றொரு ப்ரோமோவில் தான் மொத்த விறுவிறுப்பும் எகிறி போய்க் கிடக்கிறது.

Divorce குடுக்க போறீங்களா?

நீதிபதி நேரடியாக இரண்டு பேரிடமும், விவாகரத்துக்கு தயாரா என கேட்க, பேயறைந்த மாதிரி நிற்கிறார் பாக்கியலட்சுமி. "என்னங்க, நாம Divorce பண்ண வந்துருக்கோமா?. அவங்க என்ன சொல்றாங்க?. எனக்கு நீங்க Divorce குடுக்க போறீங்களா?" என வேதனையுடன் கேள்விகளை கணவர் முன் அடுக்குகிறார்.

சிக்கிக் கொண்ட கோபி

மனைவிக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் கோபி, உளறிக் கொண்டே இருக்க, "இதுக்கு தான் அன்னைக்கி கையெழுத்து வாங்குனீங்களா?. நான் என்னங்க உங்களுக்கு பாவம் பண்ணேன்?" என கண்ணீருடன் கணவரின் சட்டையைப் பிடித்து உலுக்குகிறார். ஒரு வார்த்தை கூட வெளியே வராமல், சிக்கிக் கொண்டோம் என்ற நிலையில் கோபி இருக்கிறார்.

குடும்ப தகராறு

இன்னொரு பக்கம், கோபியின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, தன்னுடைய வீட்டில் பணம் கேட்கிறார் ஜெனி. இதனால், கடுப்பாகும் ஜெனியின் கணவர், அவரிடம் போய் வாக்குவாதம் செய்ய, வீட்டில் தகராறு முளைக்கிறது. அப்போது, பாக்கியலட்சுமியை பார்த்து அவரின் மகன், இது அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம் என்றும் கோபத்தில் கூறுகிறார்.

மாமியார் எடுத்த முடிவு

இதனைக் கண்டு கொண்டே இருக்கும் பாக்கியலட்சுமியின் மாமியார், மறுபடியும் ஊருக்கு போவதாக மருமகளிடம் தெரிவிக்கிறார். ஒரு பக்கம் விவாகரத்து விஷயம், இன்னொரு பக்கம் குடும்பத் தகராறு என பாக்யலட்சுமியின் குடும்பமே அல்லோலப்பட்டு கிடக்கிறது. அடுத்தடுத்து வரும் நாட்களில், இதற்கான முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi tensed with husband divorce decision what next

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi New Episode, Baakiyalakshmi New Promo, Divorce, Gopi will find this news story useful.