www.garudabazaar.com

ஆர்யா மீது பெண் அளித்த திருமண மோசடி புகார்! சைபர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணம் செய்வதாக கூறி பண மோசடி செய்ததாக நடிகர் ஆர்யா மீது, பெண் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக நடிகர் ஆர்யா ஆஜர் ஆகியுள்ளார்.

Arya at cyber crime police for enquiry over womans complaint

நடிகர் ஆர்யா, திரைப்பட நடிகை சாயீஷாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனிடையே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், நடிகர் ஆர்யா, சாயீஷாவை திருமணம் செய்துகொள்ளும் முன்பாக, தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்ததாகவும், தன்னிடம் இருந்து 71 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகவும் கூறியதுடன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சைபர் குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவகலத்தில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

அவரிடம் இந்த புகார் குறித்த முகாந்திரம் உள்ளதா என்பன போன்ற விசாரணைகள் செய்யப்பட்டும், ஆர்யாவின் தரப்பிலான விளக்கங்கள் கேட்கப்பட்டும் வருவதாக தெரிகிறது.

Also Read: பறக்கும் ரங்கன் வாத்தியார் - கபிலன் மீம்ஸ்.. பிரபல இயக்குநரின் வைரல் போஸ்ட்!

ஆர்யா மீது பெண் அளித்த திருமண மோசடி புகார்! சைபர் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர்! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya at cyber crime police for enquiry over womans complaint

People looking for online information on Arya, Cyber Crime will find this news story useful.