என்னது வாழ்நாள் முழுவதும் லாக்டவுனா ?! - ஆர்யா குறித்து சயீஷா வெளியிட்ட ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுக்காக்கும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து மக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Arya and Sayyeshaa's romantic pic during Lockdown days is going viral | லாக்டவுன் நாட்களில் ஆர்யா , சாயீஷாவின் ரொமான்டிக் ஃபோட்டோ வைரல்

இதனால் மக்கள் வீட்டிலேயே மூடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் வித்தியாசமான டாஸ்க்குகள் செய்து ஒருவருக்கொருவர் சேலஞ்ச் விடும் பதிவுகள் வைரலாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் அதில் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் பிரபலங்கள் பலரும் தங்கள் லாக்டவுன் காலங்களில் தங்கள் அன்றாட நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகை சயீஷா ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ''வாழ்நாள் முழுவதற்குமாக லாக் செய்து கொண்டோம்'' என்று தெரிவித்துள்ளார். இதுமாதிரி என்றால் வாழ்நாள் முழுவதும் நன்றாகத் தான் இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor