பிக் பாஸ் 3-ல் நானா?- அப்சரா விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் தான் பங்கேறவுள்ளதாக வெளியான தகவலை அப்சரா ரெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Apsara clarifies she is not participating in Bigg Boss Tamil season 3

கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதையடுத்து முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனும் ஒளிபரப்பானது. இரு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில், மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், 3வது சீசன் வரும் ஜூன்.23ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில், மகிளா காங்கிரஸ் செயலாளர் அப்சரா ரெட்டி பங்கேற்கவிருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல்கள் உலா வருகின்றன.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள அப்ரசா ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது ட்வீட்டில், ‘நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. முதல் சீசனில் பங்கேற்க அழைப்பு வந்தது, அதை நிராகரித்தேன். தற்போது 3வது சீசனிலும் பங்கேற்கவில்லை. டிவி ரியலிட்டி ஷோக்களில் பங்கேற்க விருப்பமில்லை. சில ஊடகங்களில் இது தொடர்பான தகவல்கள் பரவி வருகிறது. இது பொய்யான செய்து’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘பிக் பாஸ் 3-ல் நான் பங்கேற்கவில்லை. இது தொடர்பான செய்திகளை ஒளிபரப்புவதோ, நேர்காணலுக்கு போன் செய்வதோ வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்’ எனவும் அப்சரா தெரிவித்துள்ளார்.