www.garudabazaar.com

"பலர் திருமணம் செய்யாமல் சந்தோஷமாக வாழ்றாங்க".. கல்யாணம் குறித்து மனம் திறந்த ஆண்ட்ரியா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது திருமணம் குறித்த தனது எண்ணங்களை நடிகை ஆண்ட்ரியா  நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Andrea Jeremiah Talking about Marriage and Relationship

கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதற்கு முன்னர் சில படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருந்த ஆண்ட்ரியா சில  நடிகைகளுக்கு பின்னணிக் குரலும் கொடுத்துள்ளர்.

Andrea Jeremiah Talking about Marriage and Relationship

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடிப்பிலும் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. அவர் நடித்த தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கூடுதல் பாராட்டுகளை பெற்றுத் தந்தன.

சமீபத்தில் 'மாஸ்டர்', 'வட்டம்' மற்றும் 'அரண்மனை 3' ஆகிய படங்களில் தோன்றி இருந்த நடிகை ஆண்ட்ரியா, அடுத்ததாக பிசாசு 2, நோ என்ட்ரி, மல்லிகை, கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Andrea Jeremiah Talking about Marriage and Relationship

தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்  வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் நேரடி ஓடிடி வெளியீடாக சோனி லைவ் தளத்தில் நவ.18 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் நடிகை ஆண்ட்ரியா பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். திருமணம் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்த ஆண்ட்ரியா, "ஒரு 20 வயதுக்கு மேல் இருந்து 30 வயதுக்குள் ஐய்யயோ கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமே, யாரையும் சந்திக்கவில்லையே என்ற நெருக்கடி எனக்கும் இருந்தது. நான் இப்போது அதை தாண்டி வந்து விட்டேன். நிறைய பேர் வந்து கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் சந்தோசமாக இல்லை. அதே போல, நிறைய பேர் திருமணம் செய்து கொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு எந்த மாதிரியான வாழ்க்கை வரும் என்று எனக்கு தெரியாது. ஆனால்; எதுவாக இருந்தாலும் என்னுடைய சந்தோசத்திற்கு நான் தான் பொறுப்பு. அது தான் மிக முக்கியம்." என ஆண்ட்ரியா கூறினார்.

"பலர் திருமணம் செய்யாமல் சந்தோஷமாக வாழ்றாங்க".. கல்யாணம் குறித்து மனம் திறந்த ஆண்ட்ரியா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah Talking about Marriage and Relationship

People looking for online information on Andrea, Andrea Jeremiah will find this news story useful.