www.garudabazaar.com

அன்பே சிவம், பகவதி பட தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்.. சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.முரளிதரன்  இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65

Anbe Sivam Pudhu pettai Producer Muralitharan Passed away

கும்பகோணம் நாச்சியார் கோயிலுக்கு மனைவியுடன் சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். படிகட்டில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இவர் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர்.  இவரது மனைவி பெயர் உத்ரா முரளிதரன், மற்றும் கோகுல், ஶ்ரீவத்சன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

Anbe Sivam Pudhu pettai Producer Muralitharan Passed away

Lakshmi Movie Makers நிறுவனம் சார்பில் புதுப்பேட்டை, அன்பே சிவம், பகவதி, பிரியமுடன், சிலம்பாட்டம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வேலுச்சாமி, உன்னைத் தேடி, கோகுலத்தில் சீதை, கண்களால் கைது செய், ஒரு நாள் ஒரு கனவு, தாஸ், மிஸ்டர் மெட்ராஸ், வீரம் வெளஞ்ச மண்ணு, உள்ளம் கொள்ளை போகுதே, உன்னை நினைத்து ஆகிய 27 படங்களை லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'சகலகலா வல்லவன்' படத்தைத் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Anbe Sivam Pudhu pettai Producer Muralitharan Passed away

People looking for online information on Lakshmi Movie Makers, Muralidharan will find this news story useful.