www.garudabazaar.com
iTechUS

"உங்களுக்கு வெற்றி கிடைக்கணும் விக்ரமன்"..எமோஷனல் ஆன அமுதவாணன்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் அமுதவாணன். இதனால் சக போட்டியாளர்கள் அனைவரும் சோகமடைந்துள்ளனர்.

Amudhavanan emotional talk to vikraman before walk away

Also Read | வெளியேறிய போட்டியாளர்.. முதல்முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள்ள உடைஞ்சு அழுத விக்ரமன்..

முன்னதாக, Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் திடீரென பிக்பாஸ் வீடு சோகமடைந்துள்ளது.

இந்நிலையில், வீட்டினுள் அமுதவாணன் மற்றும் விக்ரமன் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது கலங்கிய கண்களுடன் பேசும் அமுதவாணன்,"எனக்கு ரொம்ப எல்லாம் தெரியாது. நான் அப்டேட் எல்லாம் கிடையாது. காமெடியா, டான்ஸா பண்ணுவேன். அவ்வளவுதான். ஆனா நீங்க அறிவார்ந்த ஒரு ஆளா இருக்கீங்க. எனக்கு கிடைக்கிறத விட உங்களுக்கு கிடைக்கணும். எனக்கு கிடைச்சா என்ன சுத்தி இருக்க கொஞ்சம் பேருக்கு ஹெல்ப் பண்ணுவேன். ஆனா, அதை முன்னாடியே செஞ்சிட்டு தான் இருக்கேன். அதை எப்படியாவது பண்ணிட்டு தான் இருப்பேன். எல்லோருக்கும் உதவி பண்ணுவேன். அதுக்கான வழி எப்படியும் வந்துடும். ஆனா நீங்க ஜெயிக்கும்போது பெரிய மாற்றமே வரும்."

"இதுமூலமா உங்க கருத்து போய் சேர்ந்ததுனா பெரிய மாற்றம் வரும். அதுதான் நல்லது. அதுதான் கரெக்ட். அதுனால ஒரு நல்ல விஷயம் நடந்துச்சுன்னா சந்தோஷம். மத்தபடி நம்ம கலாய்ச்சு பேசிருக்கோம், கோபப்பட்டிருக்கோம். இதெல்லாம் ரொம்ப சிம்பிளான விஷயம் தான்" என உருக்கத்துடன் கூறுகிறார்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த விக்ரமன் தனது கண்ணீரை துடைத்துக்கொள்ள, அவருக்கு அமுதவாணன் ஆறுதல் கூறுகிறார். ஆனாலும், விக்ரமனால் தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதனிடையே அங்குவரும் அசல் விக்ரமனை தேற்றுகிறார். இப்படி நெகிழ்ச்சியான சம்பவங்களால் பிக்பாஸ் வீடு நிறைந்துள்ளது.

Also Read | இதுனால தான் வெளியே போறேன்.. பணப்பெட்டியை எடுத்தது பற்றி மனம் திறந்து பேசிய அமுது..!

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan emotional talk to vikraman before walk away

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.